இரண்டு மின் இணைப்பு பெட்டிகள் SWDயின் பாதையில் இருப்பதால், அவை பூமியிலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
வார்டு 123 கவுன்சிலரோ அல்லது மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வோ கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்களிடம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணச் செய்வதில் எந்த வெற்றியும் பெறவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
பெரும்பாலான குடியிருப்பு வளாகங்களில் பல வாரங்களாக ஒரு முனை (single phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
லிப்ட் ரு முனை மின்சாரத்தில் வேலை செய்யாது மற்றும் பல மூத்த குடிமக்கள் இங்கு வசிக்கும் நிலையில், வேலை செய்யாத லிப்டை மக்கள் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மின்சார பிரச்சனைகள் பற்றி நேரடியாக மின் வாரியத்தின் லஸ் அலுவலகத்திலோ அல்லது மின்னகம் செயலியிலோ புகார் அளித்தும், எந்த தீர்வும் இல்லை.
பல நாட்களாக மின்சாரம் இல்லாததால், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.
செய்தி: ஸ்ரீதர் வெங்கடராமன்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…