இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகை பதிவு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு வந்தால் நல்லது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் இல்லாமல் வந்த மாணவிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இராணி மேரி கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரிசையில் நிற்க செய்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.
மயிலாப்பூரில் உள்ள உயிர் ஆர்கானிக் ஃபார்மர்ஸ் மார்க்கெட் கடையில் இப்போது ஆர்கானிக் மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தைச்…
மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட மாணவர் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது. விண்ணப்பப்…
26வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய மாண்டிசோரி பயிற்சிப் படிப்புகளில், 52வது மாண்டிசோரி பிரைமரி ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.…
மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி பெருவிழா மே 14-ம் தேதி தொடங்கி ஜூன் 3-ம் தேதி வரை…
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடன இயக்கப் பட்டறை மே 12ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தி லிட்டில் ஜிம்மில் நடைபெற…
மயிலாப்பூர் சர் சிவஸ்வாமி கலாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வெவ்வேறு ஸ்ட்ரீம்களில் மாநில வாரியத் தேர்வு முடிவுகளில் பள்ளியின் முதல்நிலை மாணவர்கள்…