இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மேலும் சில வகுப்புகள் அரசின் ஆணைக்கிணங்க மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு 9 மற்றும் 11 வகுப்பு தொடங்க அனுமதியளித்ததை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகை பதிவு கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் வர இருப்பதால் அனைத்து மாணவர்களும் நேரடி வகுப்புகளுக்கு வந்தால் நல்லது என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.
இராணி மெய்யம்மை பள்ளியில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு அவர்களின் கைகளை சானிடைசர் கொண்டு கழுவ அறிவுறுத்தப்பட்டது. மேலும் முகக்கவசம் இல்லாமல் வந்த மாணவிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
இராணி மேரி கல்லூரியில் ஆசிரியர்கள் மாணவிகளை வரிசையில் நிற்க செய்து முகக்கவசம் அணிந்து வகுப்புகளுக்கு அனுப்பிவைத்தனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…