நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மக்கள் நீண்ட நாட்களாக இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ தா வேலு சென்னை மாநகர பேருந்துகளை இயக்கும் நிர்வாகத்திடமும் மற்றும் துறை அமைச்சரிடமும் பேசி இந்த பேருந்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த 5B வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து அடையாறு வழியாக தி.நகர் செல்லும்.
இந்த பேருந்து வழித்தடம் 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலம் வாய்ந்த வழித்தடம். இந்த பேருந்து சேவை தொடங்கியதை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். பழைய காலங்களில் சென்னை ஐஐடி, தாம்பரம் செல்வதற்கும் மற்றும் தி.நகர் ஷாப்பிங் செல்வதற்கும் இந்த பேருந்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்ததாக தங்களுடைய நினைவுகளை மயிலாப்பூர் டைம்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மக்கள் இந்த பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் விதமாக சாதாரண கட்டண பேருந்தாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…