நீண்ட வருடங்களாக சென்னை மாநகர பேருந்து 5B வழித்தடம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை மயிலாப்பூர் எம்.எல்.ஏ த.வேலு இந்த பேருந்து வழிதடத்தில் பேருந்து இயக்கத்தை மீண்டும் தொடங்கி வைத்தார். மக்கள் நீண்ட நாட்களாக இந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ தா வேலு சென்னை மாநகர பேருந்துகளை இயக்கும் நிர்வாகத்திடமும் மற்றும் துறை அமைச்சரிடமும் பேசி இந்த பேருந்தை மீண்டும் இயக்க ஏற்பாடு செய்துள்ளார். இந்த 5B வழித்தடம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் குளம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து அடையாறு வழியாக தி.நகர் செல்லும்.
இந்த பேருந்து வழித்தடம் 1980 மற்றும் 90களில் மிகவும் பிரபலம் வாய்ந்த வழித்தடம். இந்த பேருந்து சேவை தொடங்கியதை பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். பழைய காலங்களில் சென்னை ஐஐடி, தாம்பரம் செல்வதற்கும் மற்றும் தி.நகர் ஷாப்பிங் செல்வதற்கும் இந்த பேருந்தை பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வந்ததாக தங்களுடைய நினைவுகளை மயிலாப்பூர் டைம்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். மக்கள் இந்த பேருந்தை அனைத்து பேருந்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் விதமாக சாதாரண கட்டண பேருந்தாக இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…