மயிலாப்பூர் டைம்ஸ் கடந்த இருபது வருடங்களாக பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் ஏழை கல்லூரியில் சேர்வதற்கும் மற்றும் இன்னும் பிற சமுதாய நலன்களை வழங்க மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறது. போன வருடம் கோவிட் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது. அதே போல இந்த வருடமும் இரண்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள குப்பங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறது.
மற்றொன்று ஆர்.ஏ.புரம் மண்டலத்தில் உள்ள கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்கப்படுகிறது. ஏனென்றால் இவர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர்.
இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…