டி.டி.கே சாலையில் உள்ள தேனாம்பேட்டை தபால் நிலையத்தில் பணியாற்றி வருபவர் பத்ரிநாதன். இவர் ஒரு முதுகலை எம்.எஸ்சி கணித பட்டதாரி. இவர் பல வேலைகளை தேடினார், வங்கியில் இருந்து கூட இவருக்கு வேலை வந்தது. ஆனால் இவர் தபால் நிலைய வேலையையே விரும்பி பணியில் சேர்ந்துள்ளார். ஏனென்றால் இவருடைய தந்தை திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இவரும் தபால் துறையில் நாற்பது வருடங்களாக பணியாற்றி வந்துள்ளார். போஸ்ட்மேனாக இருந்து பின்பு தலைமை பதவியில் பணியாற்றியவர். இவரது தந்தையும் தபால் அலுவலக வேலையில் சேர ஒரு காரணமாக இருந்துள்ளார்.
இந்த கொரோனா நேரத்தில் இவர் கைகளில் கையுறை அணிந்து தபால்களை விநியோகம் செய்து வருகிறார். இந்த நேரத்தில் அதிகளவில் கொரோனா தவிர்த்து வேறு நோய்களுக்கு வரும் மருந்து பார்சல்களை டெலிவரி செய்வதாக கூறுகிறார். அதே நேரத்தில் மக்கள் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கை தொடங்கி பணத்தை சேமித்து வருகின்றனர். அவ்வாறு சேமித்து வருபவர்களில் யாராவது இறந்து போனால் அந்த பணபலன்களை அவருடைய குடும்பத்தாருக்கு பெற்று தரும் வேலையையும் செய்து வருகிறார். இது போன்ற சேவை செய்வது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவிக்கிறார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…