செய்திகள்

மயிலாப்பூர் மயானம் நான்கு வாரங்களாக இயங்கவில்லை. ஜூன் கடைசி வாரத்தில் மட்டுமே இயங்க தொடங்கும்.

மயிலாப்பூரில் உள்ள மின் மயானம் கடந்த நான்கு வாரங்களாக பழுதடைந்துள்ளது. இங்கு தென் சென்னையிலிருந்து வரும் உடல்களை எரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த மின் மயானம் இராணி மேரி கல்லூரியின் எதிரில் மற்றும் டி.ஜி.பி அலுவலகத்தின் பின்புறம் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக கோவையிலுள்ள ஈஷா பவுண்டஷன் இந்த மாயனத்தை நிர்வகித்து வந்தது. இங்கு எரிவாயு மூலமாக உடல்கள் எரிக்கப்படுவதாகவும் அதே நேரத்தில் ஒரு உடலை எரிக்க சுமார் இரண்டு மணி நேரம் தேவைப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் கொரோனா காரணமாக ஒரு நாளில் எரிக்கப்படும் உடல்களை விட அளவுக்கு அதிகமாக உடல்களை எரித்ததால் இந்த எரியூட்டும் இயந்திரம் பழுதடைந்துள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது கொரோனா காரணமாக உடல்கள் நிறைய எரிக்கப்படவேண்டியுள்ளதால் இதன் தேவை அதிகரித்து உள்ளது. இந்த தேவையை கருத்தில் கொண்டு புதிய எரியூட்டும் இயந்திரம் வாங்க ஈஷா பவுண்டேஷனுக்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் புதியதாக இயந்திரம் வாங்கி இங்கு நிறுவுவதற்கு சுமார் நான்கு வார காலங்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த மயானத்தில் உடல்களை புதைப்பதற்கு தேவையான இடமும் பணியாட்களும் உள்ளனர்.

admin

Recent Posts

பழங்கால தமிழ் திரைப்பட ஹிட் பாடல்களின் கச்சேரி. மே 1. அனுமதி இலவசம்

பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…

2 days ago

முத்துசுவாமி தீட்சிதருக்கு அஞ்சலி: தீம் மியூசிக்கல் ஷோ. ஏப்ரல் 28ல்.

மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…

2 days ago

டாக்டர் சித்ரா மாதவன் உரை: தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள். ஏப்ரல் 27

தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…

2 days ago

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

4 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

4 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

4 days ago