நான்கு வாரங்களுக்கு மேலாக மயிலாப்பூர் மயானத்தில் தகனம் செய்யும் வசதி பழுதடைந்து செயல்படாமல் இருந்தது. எனவே தகனம் நிறுத்தப்பட்டது.
சென்னை கார்பரேஷனின் புதிய ஆணையர் பொறுப்பேற்ற பிறகு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இப்போது உபகரணங்கள் நிறுவப்பட்டு வருகிறது, மீண்டும் மயானத்தில் தகன வசதி பயன்பாட்டுக்கு வர ஜூன் 10 தேதி வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வசதிக்கு அதிக கவனம் தேவை. இது அதிகாரிகள் மற்றும் ஜி.சி.சி மற்றும் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.
ஆனால், இங்கு சில அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
1. இங்குள்ள மின்சார ஜெனரேட்டர் பலவீனமாக உள்ளது. எனவே மாற்றித்தர வேண்டும்.
2. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வாஷ்ரூம்ஸ் மோசமான நிலையில் உள்ளது. காரணம் இது அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
3. கை கழுவ வசதி இங்கு இல்லை.
4. கழிவுநீர் குழாய்கள் சரியாக இல்லாததால், கழிவுநீர் தரைக்குள் ஆங்காங்கே ஓடுகிறது.
5. இந்த மயானத்தின் வளாகத்தில் மின் விளக்குகள் மிக குறைவு. சென்னை மாநகராட்சி இப்போது மாலை 6 மணிக்கு மேல் தகனம் செய்ய அனுமதிப்பதால் மின் விளக்குகள் வசதியை அதிகரித்து தர வேண்டும்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…