மயிலாப்பூரில் கணிசமான மழை பெய்துள்ளது. மின்னல் காரணமாக சில வீட்டு உரிமையாளர்களின் மின் சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்

மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது.

இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டு சாதனங்கள் சில பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகின்றனர்; குளிர்சாதன பெட்டிகள் போன்றவை.

டி’சில்வா சாலையைச் சேர்ந்த வெங்கடேஷ் ராமகிருஷ்ணன், சில சாதனங்களுக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கெடுத்து வருவதாகக் கூறினார்.

அனைத்து உயரமான கட்டிடங்களிலும் இடி தாங்கி இருப்பது முக்கியம் என்று ஒரு நிபுணர் கூறுகிறார்; சில கட்டுமான நிறுவனங்கள் இதை அமைப்பதில்ல என்றும் ஒரு இடி தாங்கி அமைக்க சுமார் ரூ.40,000வரை செலவாகும் என்றும், அதை அமைக்க திறமையான ஒருவர் தேவை என்றும் அவர் கூறினார்.

Verified by ExactMetrics