செய்திகள்

பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்குள்ளும் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கச்சேரி சாலையின் கிழக்கு முனையில் சாலை ஓரம் ஒரு மரம் விழுந்தது. இங்குள்ள சிலர், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரும் நீர் இந்த பகுதி வழியாக செல்வதால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். (மேல் புகைப்படம்).

விடியற்காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் டாக்டர் ரங்கா சாலை மற்றும் அபிராமபுரம், திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (புகைப்படம் கீழே)

சென்னை குடிநீர் வாரியத்தால், சி பி ராமசாமி சாலையில் (தீனா கலர் லேப் எதிரில்) அகழியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘தரமற்ற வேலை’ வெள்ளத்திற்கு வழிவகுத்ததாகவும் மற்றும் இந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சஞ்சய் பின்டோ தெரிவிக்கிறார்.

ஆர்.ஏ.புரம் 3வது தெருவை சேர்ந்த ஜி.கே.கணேஷ் கிருஷ்ணன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலை, அயோத்தி குடியிருப்புகளை சேர்ந்த டாக்டர் ராம் கிரண் சில தரைதள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

1 month ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago