பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்குள்ளும் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கச்சேரி சாலையின் கிழக்கு முனையில் சாலை ஓரம் ஒரு மரம் விழுந்தது. இங்குள்ள சிலர், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரும் நீர் இந்த பகுதி வழியாக செல்வதால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். (மேல் புகைப்படம்).

விடியற்காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் டாக்டர் ரங்கா சாலை மற்றும் அபிராமபுரம், திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (புகைப்படம் கீழே)

சென்னை குடிநீர் வாரியத்தால், சி பி ராமசாமி சாலையில் (தீனா கலர் லேப் எதிரில்) அகழியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘தரமற்ற வேலை’ வெள்ளத்திற்கு வழிவகுத்ததாகவும் மற்றும் இந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சஞ்சய் பின்டோ தெரிவிக்கிறார்.

ஆர்.ஏ.புரம் 3வது தெருவை சேர்ந்த ஜி.கே.கணேஷ் கிருஷ்ணன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலை, அயோத்தி குடியிருப்புகளை சேர்ந்த டாக்டர் ராம் கிரண் சில தரைதள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

6 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

7 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago