பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்குள்ளும் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கச்சேரி சாலையின் கிழக்கு முனையில் சாலை ஓரம் ஒரு மரம் விழுந்தது. இங்குள்ள சிலர், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரும் நீர் இந்த பகுதி வழியாக செல்வதால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். (மேல் புகைப்படம்).

விடியற்காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் டாக்டர் ரங்கா சாலை மற்றும் அபிராமபுரம், திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (புகைப்படம் கீழே)

சென்னை குடிநீர் வாரியத்தால், சி பி ராமசாமி சாலையில் (தீனா கலர் லேப் எதிரில்) அகழியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘தரமற்ற வேலை’ வெள்ளத்திற்கு வழிவகுத்ததாகவும் மற்றும் இந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சஞ்சய் பின்டோ தெரிவிக்கிறார்.

ஆர்.ஏ.புரம் 3வது தெருவை சேர்ந்த ஜி.கே.கணேஷ் கிருஷ்ணன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலை, அயோத்தி குடியிருப்புகளை சேர்ந்த டாக்டர் ராம் கிரண் சில தரைதள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கிறார்.

Verified by ExactMetrics