செய்திகள்

பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்குள்ளும் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கச்சேரி சாலையின் கிழக்கு முனையில் சாலை ஓரம் ஒரு மரம் விழுந்தது. இங்குள்ள சிலர், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரும் நீர் இந்த பகுதி வழியாக செல்வதால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். (மேல் புகைப்படம்).

விடியற்காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் டாக்டர் ரங்கா சாலை மற்றும் அபிராமபுரம், திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (புகைப்படம் கீழே)

சென்னை குடிநீர் வாரியத்தால், சி பி ராமசாமி சாலையில் (தீனா கலர் லேப் எதிரில்) அகழியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘தரமற்ற வேலை’ வெள்ளத்திற்கு வழிவகுத்ததாகவும் மற்றும் இந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சஞ்சய் பின்டோ தெரிவிக்கிறார்.

ஆர்.ஏ.புரம் 3வது தெருவை சேர்ந்த ஜி.கே.கணேஷ் கிருஷ்ணன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலை, அயோத்தி குடியிருப்புகளை சேர்ந்த டாக்டர் ராம் கிரண் சில தரைதள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

7 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

7 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

8 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago