பருவமழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்த மயிலாப்பூர் தெருக்கள்

மயிலாப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இன்று அதிகாலை முதல் பெய்த கன மழையால் மயிலாப்பூர் மண்டலம் முழுவதும் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

விவேகானந்தா கல்லூரி வளாகத்திற்குள்ளும் பி.எஸ்.சிவசாமி சாலையிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்பட்டது. கச்சேரி சாலையின் கிழக்கு முனையில் சாலை ஓரம் ஒரு மரம் விழுந்தது. இங்குள்ள சிலர், உள்ளூர் பகுதிகளில் இருந்து வரும் நீர் இந்த பகுதி வழியாக செல்வதால் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கூறுகிறார்கள். (மேல் புகைப்படம்).

விடியற்காலை வரை தொடர்ந்து பெய்த மழையால் டாக்டர் ரங்கா சாலை மற்றும் அபிராமபுரம், திருவள்ளுவர் கோயில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. (புகைப்படம் கீழே)

சென்னை குடிநீர் வாரியத்தால், சி பி ராமசாமி சாலையில் (தீனா கலர் லேப் எதிரில்) அகழியை நிரப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட ‘தரமற்ற வேலை’ வெள்ளத்திற்கு வழிவகுத்ததாகவும் மற்றும் இந்த இடம் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சஞ்சய் பின்டோ தெரிவிக்கிறார்.

ஆர்.ஏ.புரம் 3வது தெருவை சேர்ந்த ஜி.கே.கணேஷ் கிருஷ்ணன் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலை, அயோத்தி குடியிருப்புகளை சேர்ந்த டாக்டர் ராம் கிரண் சில தரைதள குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததாக தெரிவிக்கிறார்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago