Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது.

இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில் பெரும்பாலோர் பிளஸ் டூ படிக்கின்றனர், சிலர் கல்லூரி சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை ஆதரவளித்து வரும் பள்ளியான ஆர். ஏ. புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 குழந்தைகளுக்கு இரண்டு செட் பள்ளி சீருடைகளுக்கான நிதியையும் அறக்கட்டளை வழங்கியது.

அடுத்த இரண்டு வாரங்களில், இளங்கலைப் படிப்புகளில் சேர உதவி தேவைப்படும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

இதற்கு மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடை தேவை. மயிலாப்பூர் டைம்ஸின் மேலாளர் சாந்தியை 2498 2244 என்ற எண்ணில் அழைத்து உங்கள் நன்கொடையை வழங்கலாம். நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு சேர்க்கை பெற்ற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். இந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும்.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago