Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது.

இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில் பெரும்பாலோர் பிளஸ் டூ படிக்கின்றனர், சிலர் கல்லூரி சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை ஆதரவளித்து வரும் பள்ளியான ஆர். ஏ. புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 குழந்தைகளுக்கு இரண்டு செட் பள்ளி சீருடைகளுக்கான நிதியையும் அறக்கட்டளை வழங்கியது.

அடுத்த இரண்டு வாரங்களில், இளங்கலைப் படிப்புகளில் சேர உதவி தேவைப்படும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

இதற்கு மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடை தேவை. மயிலாப்பூர் டைம்ஸின் மேலாளர் சாந்தியை 2498 2244 என்ற எண்ணில் அழைத்து உங்கள் நன்கொடையை வழங்கலாம். நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு சேர்க்கை பெற்ற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். இந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும்.

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago