Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) மாணவர்களுக்கு ரூ.2,92,500 நிதியுதவி வழங்கியுள்ளது. நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளை (MTCT) கடந்த மூன்று வாரங்களாக ரூ.2,92,500 நிதியுதவி அளித்துள்ளது.

இந்தத் தொகை ஆறு உள்ளூர்ப் பள்ளிகளைச் சேர்ந்த 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,  அவர்களில் பெரும்பாலோர் பிளஸ் டூ படிக்கின்றனர், சிலர் கல்லூரி சேர்க்கையைப் பெற்றுள்ளனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக அறக்கட்டளை ஆதரவளித்து வரும் பள்ளியான ஆர். ஏ. புரத்தில் உள்ள செயின்ட் லாசரஸ் நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 குழந்தைகளுக்கு இரண்டு செட் பள்ளி சீருடைகளுக்கான நிதியையும் அறக்கட்டளை வழங்கியது.

அடுத்த இரண்டு வாரங்களில், இளங்கலைப் படிப்புகளில் சேர உதவி தேவைப்படும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

இதற்கு மயிலாப்பூர்வாசிகளின் நன்கொடை தேவை. மயிலாப்பூர் டைம்ஸின் மேலாளர் சாந்தியை 2498 2244 என்ற எண்ணில் அழைத்து உங்கள் நன்கொடையை வழங்கலாம். நன்கொடைகளுக்கு வரி விளக்கு உண்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்று அடுத்த நிலைக்கு சேர்க்கை பெற்ற தகுதியானவர்களை நீங்களும் பரிந்துரைக்கலாம். இந்த மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் இருந்து கடிதம் பெற்று வர வேண்டும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago