இதே போன்று கோவிட் கேர் பணியாளர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர். வெளியில் சாப்பிடுவதற்கும் கடைகள் ஏதும் இல்லை. கடந்த வருடம் மாநகராட்சி காலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியதாகவும் ஆனால் தற்போது புதிய ஒப்பந்தத்தில் பட்ஜெட் பற்றாக்குறையால் இவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட் கேர் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி. நகர், கே.வி.பி கார்டன் போன்ற பகுதிகளில் சுமார் 112 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காமராஜ் சாலை பூங்காவில் தினமும் ஒன்று கூடுகின்றனர். இவர்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…