இதே போன்று கோவிட் கேர் பணியாளர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர். வெளியில் சாப்பிடுவதற்கும் கடைகள் ஏதும் இல்லை. கடந்த வருடம் மாநகராட்சி காலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியதாகவும் ஆனால் தற்போது புதிய ஒப்பந்தத்தில் பட்ஜெட் பற்றாக்குறையால் இவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட் கேர் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி. நகர், கே.வி.பி கார்டன் போன்ற பகுதிகளில் சுமார் 112 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காமராஜ் சாலை பூங்காவில் தினமும் ஒன்று கூடுகின்றனர். இவர்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…
மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…
அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…
ஹோட்டல் உட்லண்ட்ஸுக்கு எதிரே உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்ப கார்கள் மற்றும் பைக்குகள்…
மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…