ஆர்.ஏ.புரம் அருகே காமராஜ் சாலையில் உள்ள சென்னை கார்பரேஷனின் வார்டு 173 வது அலுவலகம் தினமும் பரபரப்பாகவே இயங்குகிறது. இங்கிருந்துதான் பெரும்பாலான சுகாதார ஊழியர்கள் மயிலாப்பூரில் உள்ள முக்கியமான பகுதிகளுக்கு சென்று பணியாற்றுகிறார்கள். இங்கு சுமார் 110க்கும் மேற்பட்ட கோவிட் கேர் ஒப்பந்த பணியாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு தினமும் தர்மாம்பாள் பூங்காவில் அன்றைய வேலை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெறும். பின்னர் இங்கிருந்து கிளம்பி அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று கோவிட் சம்பந்தமான உடல் வெப்ப பரிசோதனை, யாருக்காவது கோவிட் அறிகுறி உள்ளதா, மற்றும் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்புவது, தனிமைப்படுத்துதலில் இருப்பவர்களின் விவரங்களை சேமிப்பது போன்ற வேலைகளை செய்வார்கள்.
மேலும் இந்த அலுவலகத்திற்கு அருகிலேயே அம்மா கிளினிக்கும் உள்ளது. கோவிட் சூழ்நிலையால் இங்கு பொது மருத்துவம் தற்போது அவ்வளவாக பார்க்கப்படுவதில்லை. நீங்கள் இங்கு வந்து காலை 9.30 மணிக்குள் பரிசோதனை செய்யலாம். இங்கு பணியாற்றும் மருத்துவ குழு பத்துமணிக்கு மேல் வெளியில் உள்ள முகாம்களுக்கு அல்லது தடுப்பூசி போட சென்றுவிடுவார்கள். இது தவிர இந்த பகுதியில் சுமார் மூன்று ஆட்டோக்கள் உள்ளது. மக்கள் இந்த ஆட்டோக்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பரிசோதனைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர். மேலும் இங்கு ஒரு ஆம்புலென்ஸ் போன்ற வாகனம் உள்ளது. இந்த வாகனம் நோய்தொற்று அதிகமாக இருக்கும் நோயாளிகளை மருத்துவமனைகளில் சேர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த வார்டு 173ஐ சுற்றிலும் காலை முதல் மதியம் இரண்டு மணிவரை பரபரப்பாகவே காணப்படுகிறது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…