Categories: சமூகம்

மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட், கோவிட் கேர் தொழிலாளர்கள் மற்றும் கோவிட் -19 தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸுக்கு கடந்த பத்து நாட்களாக பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது என்ற செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்த செய்திகள் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் வந்தது. இவர்கள் தினமும் கோவிட் சம்பந்தமான வேலைகளை செய்வதற்கு அனைத்து பகுதிகளுக்கும் செல்வர். உதவிகள் சில இடங்களில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் சில இடங்களில் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இல்லாமல் உள்ள தினக்கூலி வேலை செய்பவர்களுக்கும் உதவிகள் தேவைப்படுவதாக தெரிவிக்கின்றனர்.  மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்யப்பட்டு பொதுமக்களிடம் நன்கொடைகள் பெறப்பட்டுவருகிறது. ஏற்கனெவே பட்டினப்பாக்கம் பகுதியில் கோவிட் கேர் பணியாளர்கள் மூலம் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவற்றை மூன்று குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதே போன்று கோவிட் கேர் பணியாளர்களின் வேலை நேரம் காலை ஏழு மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணிக்கு முடிவடைகிறது. நிறைய பணியாளர்கள் காலையில் உணவு ஏதும் சாப்பிடாமலேயே வேலைக்கு வந்து விடுகின்றனர். வெளியில் சாப்பிடுவதற்கும் கடைகள் ஏதும் இல்லை. கடந்த வருடம் மாநகராட்சி காலை சிற்றுண்டி மற்றும் தேநீர் வழங்கியதாகவும் ஆனால் தற்போது புதிய ஒப்பந்தத்தில் பட்ஜெட் பற்றாக்குறையால் இவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கோவிட் கேர் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆர்.ஏ புரம், எம்.ஆர்.சி. நகர், கே.வி.பி கார்டன் போன்ற பகுதிகளில் சுமார் 112 ஒப்பந்த பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் காமராஜ் சாலை பூங்காவில் தினமும் ஒன்று கூடுகின்றனர். இவர்களுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் சூடான ஆவின் பால் வழங்க முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த இரண்டு சேவைகளுக்கும் நன்கொடைகள் தேவைப்படுகிறது. பொதுமக்கள் தங்களால் இயன்ற நன்கொடைகளை அளிக்கலாம். நன்கொடைகள் அளிப்பவர்கள், நன்கொடை பற்றிய விவரங்களை mytimesedit@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Acc No: 420948275
Bank: இந்தியன் வங்கி
Branch: அபிராமபுரம்
IFSC CODE: IDIB000A092

 

admin

Recent Posts

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

3 hours ago

கிழக்கு அபிராமபுரத்தில் உள்ள இந்தகடையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள்.

இந்தக் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட புதிய மாம்பழங்கள் கிழக்கு அபிராமபுரத்தில்…

1 day ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மாநில அமைச்சராகப் பதவியேற்பு

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கடரமணன், முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழா…

3 days ago

மயிலாப்பூர் புதிய சட்டமன்ற உறுப்பினர், உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய மூன்று முக்கியப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டுள்ளார்; போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைக் கையாள்வது அவற்றில் ஒன்றாகும்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர், TVK கட்சியைச் சேர்ந்த பி. வெங்கடராமணனின் நிகழ்ச்சி நிரலில் மூன்று பிரச்சினைகள் முதலிடம்…

1 week ago

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

4 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

4 weeks ago