Categories: ருசி

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி. இந்த சித்ரகுளம் உணவகத்தில் உள்ள டாப் மெனு.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை மற்றும் காபி ஆகியவை அதிகமாக விற்றதை ஆதித்யா ஷிவ்பிங்க் உணர்ந்திருந்தார், ​​​​எனவே மயிலாப்பூர் பகுதியில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.

அதனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்கு இடையே சித்ரகுளம் மேற்குத் தெருவின் ஒரு முனையில் ‘நெய் இட்லி சாம்பார்’ என்ற உணவுக் கடையை திறந்தார். இப்போது சில மாதங்களாக, இந்த கடை நாள் முழுவதும் திறந்துள்ளது.

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி ஆகியவை இங்கே மெனுவில் முதலிடம் வகிக்கின்றன.

ஆதித்யா (கீழே காணப்படுகிறார்), நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர் மற்றும் உணவு வணிகத்தில் ‘பேக்அப்’ ஆக இறங்கினார், இன்னும் பொறுமையாக இருக்கிறார், மேலும் உணவுப் பிரியர்களை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்.

உணவகத்திற்கு நிதி கொண்டுவரும் அவரது கூட்டாளியான அஷ்வின் குமாரும் பொறுமையாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்கின்றார்.

இருவரையும் வாழ வைப்பது அவர்களின் கேட்டரிங் தொழில்.

சமூக நிகழ்வுகளுக்கான இலை சாப்பாடு, கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான தின்பண்டங்கள், மீடியா மீட் அல்லது ஸ்டோர் லாஞ்ச்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சமையலறையில் இருந்து வழங்கப்படுகிறது.

அப்படியானால், பிரபலமான உணவு டிரக்கை அவர் ஏன் மயிலாப்பூருக்கு கொண்டு வரவில்லை?

“நாங்கள் மயிலாப்பூர் உணவகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ஆதித்யா. மேலும் தனது டிரக்கை வாடகைக்கு எடுக்க யாராவது முன்வந்தால், மயிலாப்பூரின் மறுபுறத்தில் அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்கிறார்..

இப்போதைக்கு சித்ரகுளம் பகுதியில் உள்ள தனது கடையில் இருந்து தினமும் நெய்-இட்லி, இட்லி-வடை குழம்பு, காபி போன்றவற்றை அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறார்.

உணவகம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840561061 என்ற எண்ணை அழைக்கவும்.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

1 week ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago