Categories: ருசி

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி. இந்த சித்ரகுளம் உணவகத்தில் உள்ள டாப் மெனு.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை மற்றும் காபி ஆகியவை அதிகமாக விற்றதை ஆதித்யா ஷிவ்பிங்க் உணர்ந்திருந்தார், ​​​​எனவே மயிலாப்பூர் பகுதியில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.

அதனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்கு இடையே சித்ரகுளம் மேற்குத் தெருவின் ஒரு முனையில் ‘நெய் இட்லி சாம்பார்’ என்ற உணவுக் கடையை திறந்தார். இப்போது சில மாதங்களாக, இந்த கடை நாள் முழுவதும் திறந்துள்ளது.

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி ஆகியவை இங்கே மெனுவில் முதலிடம் வகிக்கின்றன.

ஆதித்யா (கீழே காணப்படுகிறார்), நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர் மற்றும் உணவு வணிகத்தில் ‘பேக்அப்’ ஆக இறங்கினார், இன்னும் பொறுமையாக இருக்கிறார், மேலும் உணவுப் பிரியர்களை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்.

உணவகத்திற்கு நிதி கொண்டுவரும் அவரது கூட்டாளியான அஷ்வின் குமாரும் பொறுமையாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்கின்றார்.

இருவரையும் வாழ வைப்பது அவர்களின் கேட்டரிங் தொழில்.

சமூக நிகழ்வுகளுக்கான இலை சாப்பாடு, கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான தின்பண்டங்கள், மீடியா மீட் அல்லது ஸ்டோர் லாஞ்ச்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சமையலறையில் இருந்து வழங்கப்படுகிறது.

அப்படியானால், பிரபலமான உணவு டிரக்கை அவர் ஏன் மயிலாப்பூருக்கு கொண்டு வரவில்லை?

“நாங்கள் மயிலாப்பூர் உணவகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ஆதித்யா. மேலும் தனது டிரக்கை வாடகைக்கு எடுக்க யாராவது முன்வந்தால், மயிலாப்பூரின் மறுபுறத்தில் அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்கிறார்..

இப்போதைக்கு சித்ரகுளம் பகுதியில் உள்ள தனது கடையில் இருந்து தினமும் நெய்-இட்லி, இட்லி-வடை குழம்பு, காபி போன்றவற்றை அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறார்.

உணவகம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840561061 என்ற எண்ணை அழைக்கவும்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

5 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago