Categories: ருசி

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி. இந்த சித்ரகுளம் உணவகத்தில் உள்ள டாப் மெனு.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை மற்றும் காபி ஆகியவை அதிகமாக விற்றதை ஆதித்யா ஷிவ்பிங்க் உணர்ந்திருந்தார், ​​​​எனவே மயிலாப்பூர் பகுதியில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.

அதனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்கு இடையே சித்ரகுளம் மேற்குத் தெருவின் ஒரு முனையில் ‘நெய் இட்லி சாம்பார்’ என்ற உணவுக் கடையை திறந்தார். இப்போது சில மாதங்களாக, இந்த கடை நாள் முழுவதும் திறந்துள்ளது.

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி ஆகியவை இங்கே மெனுவில் முதலிடம் வகிக்கின்றன.

ஆதித்யா (கீழே காணப்படுகிறார்), நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர் மற்றும் உணவு வணிகத்தில் ‘பேக்அப்’ ஆக இறங்கினார், இன்னும் பொறுமையாக இருக்கிறார், மேலும் உணவுப் பிரியர்களை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்.

உணவகத்திற்கு நிதி கொண்டுவரும் அவரது கூட்டாளியான அஷ்வின் குமாரும் பொறுமையாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்கின்றார்.

இருவரையும் வாழ வைப்பது அவர்களின் கேட்டரிங் தொழில்.

சமூக நிகழ்வுகளுக்கான இலை சாப்பாடு, கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான தின்பண்டங்கள், மீடியா மீட் அல்லது ஸ்டோர் லாஞ்ச்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சமையலறையில் இருந்து வழங்கப்படுகிறது.

அப்படியானால், பிரபலமான உணவு டிரக்கை அவர் ஏன் மயிலாப்பூருக்கு கொண்டு வரவில்லை?

“நாங்கள் மயிலாப்பூர் உணவகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ஆதித்யா. மேலும் தனது டிரக்கை வாடகைக்கு எடுக்க யாராவது முன்வந்தால், மயிலாப்பூரின் மறுபுறத்தில் அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்கிறார்..

இப்போதைக்கு சித்ரகுளம் பகுதியில் உள்ள தனது கடையில் இருந்து தினமும் நெய்-இட்லி, இட்லி-வடை குழம்பு, காபி போன்றவற்றை அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறார்.

உணவகம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840561061 என்ற எண்ணை அழைக்கவும்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago