மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை மற்றும் காபி ஆகியவை அதிகமாக விற்றதை ஆதித்யா ஷிவ்பிங்க் உணர்ந்திருந்தார், எனவே மயிலாப்பூர் பகுதியில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.
அதனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்கு இடையே சித்ரகுளம் மேற்குத் தெருவின் ஒரு முனையில் ‘நெய் இட்லி சாம்பார்’ என்ற உணவுக் கடையை திறந்தார். இப்போது சில மாதங்களாக, இந்த கடை நாள் முழுவதும் திறந்துள்ளது.
நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி ஆகியவை இங்கே மெனுவில் முதலிடம் வகிக்கின்றன.
ஆதித்யா (கீழே காணப்படுகிறார்), நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர் மற்றும் உணவு வணிகத்தில் ‘பேக்அப்’ ஆக இறங்கினார், இன்னும் பொறுமையாக இருக்கிறார், மேலும் உணவுப் பிரியர்களை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்.
உணவகத்திற்கு நிதி கொண்டுவரும் அவரது கூட்டாளியான அஷ்வின் குமாரும் பொறுமையாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்கின்றார்.
இருவரையும் வாழ வைப்பது அவர்களின் கேட்டரிங் தொழில்.
சமூக நிகழ்வுகளுக்கான இலை சாப்பாடு, கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான தின்பண்டங்கள், மீடியா மீட் அல்லது ஸ்டோர் லாஞ்ச்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சமையலறையில் இருந்து வழங்கப்படுகிறது.
அப்படியானால், பிரபலமான உணவு டிரக்கை அவர் ஏன் மயிலாப்பூருக்கு கொண்டு வரவில்லை?
“நாங்கள் மயிலாப்பூர் உணவகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ஆதித்யா. மேலும் தனது டிரக்கை வாடகைக்கு எடுக்க யாராவது முன்வந்தால், மயிலாப்பூரின் மறுபுறத்தில் அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்கிறார்..
இப்போதைக்கு சித்ரகுளம் பகுதியில் உள்ள தனது கடையில் இருந்து தினமும் நெய்-இட்லி, இட்லி-வடை குழம்பு, காபி போன்றவற்றை அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறார்.
உணவகம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840561061 என்ற எண்ணை அழைக்கவும்.
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…
ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…