Categories: ருசி

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி. இந்த சித்ரகுளம் உணவகத்தில் உள்ள டாப் மெனு.

மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டிரக்கில் உண்வு கடையை நடத்தி வந்தபோது பொடி இட்லி, வடை மற்றும் காபி ஆகியவை அதிகமாக விற்றதை ஆதித்யா ஷிவ்பிங்க் உணர்ந்திருந்தார், ​​​​எனவே மயிலாப்பூர் பகுதியில் ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதில் தோன்றியது.

அதனால், கொரோனா தொற்று ஊரடங்கிற்கு இடையே சித்ரகுளம் மேற்குத் தெருவின் ஒரு முனையில் ‘நெய் இட்லி சாம்பார்’ என்ற உணவுக் கடையை திறந்தார். இப்போது சில மாதங்களாக, இந்த கடை நாள் முழுவதும் திறந்துள்ளது.

நெய் இட்லி-சாம்பார், பொடி இட்லி, ஃபில்டர் காபி, க்ரீன் சில்லி டீ மற்றும் காபி கேசரி ஆகியவை இங்கே மெனுவில் முதலிடம் வகிக்கின்றன.

ஆதித்யா (கீழே காணப்படுகிறார்), நடிகராக தனது வாழ்க்கையைத் தொடர்ந்தவர் மற்றும் உணவு வணிகத்தில் ‘பேக்அப்’ ஆக இறங்கினார், இன்னும் பொறுமையாக இருக்கிறார், மேலும் உணவுப் பிரியர்களை வரவேற்க ஆர்வமாக இருக்கிறார்.

உணவகத்திற்கு நிதி கொண்டுவரும் அவரது கூட்டாளியான அஷ்வின் குமாரும் பொறுமையாக இருந்தாலும் ஓய்வின்றி உழைக்கின்றார்.

இருவரையும் வாழ வைப்பது அவர்களின் கேட்டரிங் தொழில்.

சமூக நிகழ்வுகளுக்கான இலை சாப்பாடு, கார்ப்பரேட் நிகழ்வுகளுக்கான தின்பண்டங்கள், மீடியா மீட் அல்லது ஸ்டோர் லாஞ்ச்களில் வழங்கப்படும் சிற்றுண்டிகள் அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய சமையலறையில் இருந்து வழங்கப்படுகிறது.

அப்படியானால், பிரபலமான உணவு டிரக்கை அவர் ஏன் மயிலாப்பூருக்கு கொண்டு வரவில்லை?

“நாங்கள் மயிலாப்பூர் உணவகத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறோம்,” என்கிறார் ஆதித்யா. மேலும் தனது டிரக்கை வாடகைக்கு எடுக்க யாராவது முன்வந்தால், மயிலாப்பூரின் மறுபுறத்தில் அதை மீண்டும் திறப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்கிறார்..

இப்போதைக்கு சித்ரகுளம் பகுதியில் உள்ள தனது கடையில் இருந்து தினமும் நெய்-இட்லி, இட்லி-வடை குழம்பு, காபி போன்றவற்றை அதிகளவில் விற்பனை செய்ய விரும்புகிறார்.

உணவகம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 9840561061 என்ற எண்ணை அழைக்கவும்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago