மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே புதிய கடிகார கோபுரம் அமைப்பு. மணி அடிக்கும் போது குறள் வசனங்கள் ஒலிபரப்பப்படுகிறது.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலையும் அதன் அருகே உள்ள கடிகார கோபுரம் புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளன.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு இந்த திட்டத்தை துவக்கி வைத்து, புதுப்பிக்கப்பட்ட இடத்தை இந்த வாரம் முறையாக திறந்து வைத்தார்.

நடைபாதைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன, இங்கு அமைக்கப்பட்டுள்ள புதிய புல்வெளிகள் மற்றும் தாவரங்கள் இந்த இடத்தை பசுமையாக்குகின்றன.

இங்கு சேர்க்கப்பட்ட அம்சம் புதிய கடிகார கோபுரம் இதில் தமிழில் ஒலிபரப்பப்படும் குறள். கடுமையான போக்குவரத்து நெரிசலில் இருந்தாலும், குறளை கேட்க நீங்கள் சிலை அமைந்திருக்கும் பகுதிக்கு அருகில் சாலையில் இருக்க வேண்டும்.

Verified by ExactMetrics