‘சைபர் கிரைம்களைக் கட்டுப்படுத்துவதே முதன்மையானது’: புதிய காவல்துறை துணை ஆணையர்.

ஜாதி குற்றங்கள் நிறைந்த திருநெல்வேலிப் பகுதியிலிருந்து மெட்ரோவின் மையப்பகுதியாகவும், பாரம்பரிய மையமான மயிலாப்பூரில், இந்த ஆண்டு ஜனவரியில் மயிலாப்பூர் துணை காவல் ஆணையராகப் பொறுப்பேற்ற ரஜத் சதுர்வேதிக்கு இது ஒரு தீவிர மாற்றமாக இருக்கலாம்.

மயிலாப்பூர் பகுதியில் சைபர் கிரைம் விகிதத்தைக் குறைப்பதே தனது முன்னுரிமைப் பட்டியலில் உள்ளதாக அவர் சனிக்கிழமை மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தார்.

“ஆன்லைனில் சிக்கலில் மாட்டிக்கொண்டவர்களிடம் கொஞ்சம் விழிப்புணர்வு இல்லை,” என்று அவர் கூறுகிறார். ஆன்லைனில் அவர்கள் எவ்வாறு எளிதாக இணைக்கப்படுகிறார்கள் என்பது பற்றியும், ஆன்லைன் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குக் கற்பிக்க விரும்புகிறேன். மக்கள் எதாவது ஆன்லைன் சம்பந்தமான பிரச்சனையில் மாட்டிக்கொண்டால் உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க 1930 எண் உள்ளது, மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

மதுராவைச் சேர்ந்த கணினி பொறியாளரான அதிகாரி ரஜத், குற்றங்களைக் குறைப்பதில் தொழில்நுட்பம் பெரும் பங்கு வகிக்கும் என்று நம்புகிறார்.

மயிலாப்பூர் மண்டலத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வை சைபர் காவல் நிலையங்களை வலுப்படுத்துவதாகும். தொலைந்து போன, போன் கேஸ்களை விரைவாக மீட்டெடுக்க உதவும் லைவ் மொபைல் டிராக்கிங் சிஸ்டத்தை செயல்படுத்துவதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

ஸ்மார்ட் காவலர் மொபைல் செயலியின் பயன்பாட்டை அதிகரிக்க அவர் தனது குழு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார், “எதிர்காலத்தில் குற்றவாளிகளைக் கண்காணிக்க இதுபோன்ற பயன்பாடுகள் காவல்துறைக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்கிறார்.

வாகன திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றை குறைக்க வேண்டும்

தற்போது மயிலாப்பூர் மண்டலத்தில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

“மார்ச் மாத இறுதிக்குள், மயிலாப்பூரில் உள்ள தெருக்களில் 135 இடங்களில் விலையுயர்ந்த 8 எம்பி சிசிடிவி கேமராக்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இது தவறு செய்பவர்களுக்குத் தடையாக செயல்படுவதோடு, குற்றங்களைத் தடுப்பதிலும் கண்டறிவதிலும் ஒரு பெரிய படியாகும்.

“மேலும், சிசிடிவிகளின் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு கச்சேரி சாலையில் உள்ள எங்கள் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இது உடனடி நடவடிக்கைகளின் மூலம் குற்றங்களை விரைவாகத் தீர்க்க வழிவகுக்கும்” என்கிறார் ரஜத்.

மெரினாவை பாதுகாப்பானதாக்குதல்

மெரினா கடற்கரையை மக்களுக்கு பாதுகாப்பான இடமாக மாற்றுவதை அவர் இலக்காகக் கொண்டுள்ளார், மேலும் கடற்கரையில் நடக்கும் குற்ற விகிதங்களைக் குறைக்க முடியும் என்றும் அவர் நம்புகிறார்.

கூட்டத்தை நிர்வகிக்கும் பணியில் இருக்கும் போது மணலில் ஓட்டிச் செல்வதற்காக தனது குழுவிற்கு ஒரு ‘ஆல் டெரெய்ன் வெஹிக்கிள்’ ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

அவர் மெரினாவில் குற்றங்களை குறைக்க குழுக்களை நியமித்துள்ளார், மேலும் அவர் ஏற்கனவே நேர்மறையான முடிவுகளைக் காண்கிறார் என்று கூறுகிறார்.

செய்தி, புகைப்படம்: எஸ் பிரபு

admin

Recent Posts

புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியா பூங்கா மீண்டும் திறப்பு. பார்வையாளர்கள் மற்றும் பள்ளி/கல்லூரி குழுக்கள் பார்வையிடலாம்.

ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…

5 days ago

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

3 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago