Categories: சமூகம்

ஆர்.ஏ.புரத்தில் உள்ள குடியிருப்பு வாரியத்தின் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் முறையாக திறந்தாலும் குடியிருப்புகளை ஒப்படைக்க தாமதம் ஏற்படுவதால் குடியிருப்புவாசிகள் கோபத்தில் உள்ளனர்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள வல்லீஸ்வரன் தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளுக்கு, 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களுடைய அடுக்குமாடி குடியிருப்புகளைப் பெறுவதற்காக ஒதுக்கீடு மற்றும் பணம் செலுத்தப்பட்ட போதிலும் இன்னும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

அவர்களுக்கு 2021ல் இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

மின் வினியோகத்திற்கான மீட்டர்கள் இன்னும் அமைக்கப்பட உள்ளதாகவும், சில சிறிய ‘டச்-அப்’ வேலைகள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் சமீபத்தில் இந்த குடியிருப்புகளை அடையாளமாக திறந்தபிறகு, இந்தத் துறைக்கான மாநில அமைச்சர் டி.எம்.அன்பரசன், மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு மற்றும் உள்ளூர் திமுகவினருடன் இணைந்து, சிலரிடம் சாவியை அடையாளமாக வழங்கும் விழாவை சமீபத்தில் தொடங்கினர்.

“கொரோனா தொற்றுநோய் தாமதத்தை ஏற்படுத்தியது, ஆனால் கடந்த ஆண்டு எங்களுக்கு குடியிருப்புகள் கிடைத்திருக்க வேண்டும். நாங்கள் வெளியில் தற்போது தங்கியிருக்கும் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை பணத்தை யார் கொடுப்பார்கள்?”, என்று இங்கு வசித்து வந்த மக்கள் குமுறுகின்றனர்.

2019 டிசம்பரில் சுமார் 570 குடும்பங்கள் இந்த வளாகத்திலிருந்து வெளியேறியது, இங்கு மூன்று பிளாக்குகளில் 630 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.

இங்கு வசிக்கும் உரிமையுள்ள அனைவருக்கும் சமீபத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் அனைவரும் விதிகளை பூர்த்தி செய்யும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும், அவ்வாறு சமர்ப்பித்தவர்களுக்கு மட்டுமே குடியிருப்பின் சாவி வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago