ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார்.
கடந்த வாரம் திடீரென மழை பெய்த போதிலும், இந்த கலைஞர் தனது வேலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக செலவிட்டார்.
தனது புத்தாண்டு சம்பந்தமான ஓவியத்தை வரைவதற்கு, கடந்த ஆண்டில் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய சில கருப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன், என்று கூறுகிறார். எனவே சென்னை பெருமழை, ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம், மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், கொரோனா வைரஸைக் கையாள்வது, போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு தனது சுவற்றில் சொந்த செலவில் ஓவியம் தீட்டியுள்ளதாக கூறுகிறார்.
லட்சுமணன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வேலையைப் பொறுத்த வரையில் தனக்கு கடினமான நேரமாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக சுவர்களில் ஓவியங்கள் தீட்டுவது மற்றும் பெரிய சைன் போர்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாக கூறுகிறார்.
இவர் தனியாகவும் வேலை செய்கிறார். மேலும் படுக்கையறைகள் அல்லது கடைகளின் சுவர்களில் வெள்ளை அடித்தல் மற்றும் படுக்கையறைகள் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். வேலைகள் பெறுவதை பொறுத்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.
ஓவியர் லட்சுமணின் சேவைகள் தேவைப்பட்டால், 8939651280 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…