சுவர் ஓவியமாக ஒரு வணிக கலைஞரின் புத்தாண்டு செய்தி.

ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார்.

கடந்த வாரம் திடீரென மழை பெய்த போதிலும், இந்த கலைஞர் தனது வேலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக செலவிட்டார்.

தனது புத்தாண்டு சம்பந்தமான ஓவியத்தை வரைவதற்கு, கடந்த ஆண்டில் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய சில கருப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன், என்று கூறுகிறார். எனவே சென்னை பெருமழை, ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம், மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், கொரோனா வைரஸைக் கையாள்வது, போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு தனது சுவற்றில் சொந்த செலவில் ஓவியம் தீட்டியுள்ளதாக கூறுகிறார்.

லட்சுமணன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வேலையைப் பொறுத்த வரையில் தனக்கு கடினமான நேரமாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக சுவர்களில் ஓவியங்கள் தீட்டுவது மற்றும் பெரிய சைன் போர்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாக கூறுகிறார்.

இவர் தனியாகவும் வேலை செய்கிறார். மேலும் படுக்கையறைகள் அல்லது கடைகளின் சுவர்களில் வெள்ளை அடித்தல் மற்றும் படுக்கையறைகள் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். வேலைகள் பெறுவதை பொறுத்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஓவியர் லட்சுமணின் சேவைகள் தேவைப்பட்டால், 8939651280 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago