சுவர் ஓவியமாக ஒரு வணிக கலைஞரின் புத்தாண்டு செய்தி.

ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார்.

கடந்த வாரம் திடீரென மழை பெய்த போதிலும், இந்த கலைஞர் தனது வேலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக செலவிட்டார்.

தனது புத்தாண்டு சம்பந்தமான ஓவியத்தை வரைவதற்கு, கடந்த ஆண்டில் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய சில கருப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன், என்று கூறுகிறார். எனவே சென்னை பெருமழை, ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம், மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், கொரோனா வைரஸைக் கையாள்வது, போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு தனது சுவற்றில் சொந்த செலவில் ஓவியம் தீட்டியுள்ளதாக கூறுகிறார்.

லட்சுமணன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வேலையைப் பொறுத்த வரையில் தனக்கு கடினமான நேரமாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக சுவர்களில் ஓவியங்கள் தீட்டுவது மற்றும் பெரிய சைன் போர்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாக கூறுகிறார்.

இவர் தனியாகவும் வேலை செய்கிறார். மேலும் படுக்கையறைகள் அல்லது கடைகளின் சுவர்களில் வெள்ளை அடித்தல் மற்றும் படுக்கையறைகள் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். வேலைகள் பெறுவதை பொறுத்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.

ஓவியர் லட்சுமணின் சேவைகள் தேவைப்பட்டால், 8939651280 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

admin

Recent Posts

எல்பிஜி நெருக்கடி: மக்கள் எரிவாயு நிறுவனத்தை நோக்கிச் செல்கிறார்கள், சிறிய கேட்டரிங் நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள ஒரு எரிவாயு நிறுவனத்திற்கு வெளியே புதன்கிழமை, மக்கள் கூட்டம் அலைமோதியது. எரிவாயு விநியோகம்…

5 hours ago

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

1 day ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

1 day ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago