ஆர்ட்டிஸ்ட் எம். லட்சுமணன் கடந்த மூன்று ஆண்டுகளாக சீனிவாசபுரத்தில் உள்ள அவரது வீட்டு சுவற்றில் புத்தாண்டுச் செய்தியாக பொருத்தமானதாக உணர்ந்ததை ஓவியமாக தீட்டி வருகிறார்.
கடந்த வாரம் திடீரென மழை பெய்த போதிலும், இந்த கலைஞர் தனது வேலையில் மூன்று நாட்கள் முழுவதுமாக செலவிட்டார்.
தனது புத்தாண்டு சம்பந்தமான ஓவியத்தை வரைவதற்கு, கடந்த ஆண்டில் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய சில கருப்பொருள்களை நான் தேர்ந்தெடுத்தேன், என்று கூறுகிறார். எனவே சென்னை பெருமழை, ஜெனரல் பிபின் ராவத்தின் மரணம், மாநிலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளம், கொரோனா வைரஸைக் கையாள்வது, போன்றவற்றை கருப்பொருளாக கொண்டு தனது சுவற்றில் சொந்த செலவில் ஓவியம் தீட்டியுள்ளதாக கூறுகிறார்.
லட்சுமணன் கூறுகையில், கடந்த இரண்டு வருடங்களாக வேலையைப் பொறுத்த வரையில் தனக்கு கடினமான நேரமாக இருந்தது என்று கூறுகிறார். குறிப்பாக சுவர்களில் ஓவியங்கள் தீட்டுவது மற்றும் பெரிய சைன் போர்டுகளை உருவாக்குவது போன்ற வேலைகள் மிகவும் குறைவாகவே கிடைத்ததாக கூறுகிறார்.
இவர் தனியாகவும் வேலை செய்கிறார். மேலும் படுக்கையறைகள் அல்லது கடைகளின் சுவர்களில் வெள்ளை அடித்தல் மற்றும் படுக்கையறைகள் மற்றும் சுவர்களில் ஓவியங்கள் தீட்டுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார். வேலைகள் பெறுவதை பொறுத்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்.
ஓவியர் லட்சுமணின் சேவைகள் தேவைப்பட்டால், 8939651280 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…