பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கொண்டாட்டம்.

PENN என்ற தொண்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசிகளான வெவ்வேறு துறையை சேர்ந்த – VSS ஸ்ரீதர் (கார்ப்பரேட் நிர்வாகி), ஸ்ரீ ராம் (தமிழ்நாடு காவல்துறையின் ஆலோசகர்), ஆனந்த் (தொழில்நுட்ப வல்லுநர்), ஸ்ரீராம் சர்மா, இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா மகேஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமாளிப்பது இதன் நோக்கமாகும்.

இதன் பதிவு அலுவலகம் 116/71, அப்பர்சுவாமி கோயில் தெரு, மயிலாப்பூர். அலுவலக ஊழியர்களை 92824 01503 என்ற எண்ணில் அல்லது pennindia2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகளை மக்களுக்கு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக இந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தற்காப்பு நுட்பங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொண்டு நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கொண்டாடியது. ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஆர. ஜாங்கிட், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச் செயலாளர் டி.சபிதா, பாடகர் பி. உன்னிகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகை ரேவதி, ஜிஜி மருத்துவமனையின் கமலா செல்வராஜ் மற்றும் யுனெஸ்கோவின் மூத்த ஆலோசகர் வெங்கட்ராமன். ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகி கே எஸ் சித்ரா கலந்து கொண்டார்.

பாடகி கே எஸ் சித்ரா PENN க்கான கீதத்தை பாடியுள்ளார் – இந்த பாடல் அவரது முன்னிலையில் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

11 hours ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

1 day ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

2 days ago

வெள்ளி விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்ஷரா ப்ளே ஸ்கூல். புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…

2 days ago

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

5 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago