பெண்கள், சிறுமிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஆண்டு கொண்டாட்டம்.

PENN என்ற தொண்டு நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வாசிகளான வெவ்வேறு துறையை சேர்ந்த – VSS ஸ்ரீதர் (கார்ப்பரேட் நிர்வாகி), ஸ்ரீ ராம் (தமிழ்நாடு காவல்துறையின் ஆலோசகர்), ஆனந்த் (தொழில்நுட்ப வல்லுநர்), ஸ்ரீராம் சர்மா, இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் மற்றும் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா மகேஷ் ஆகியோரால் தொடங்கப்பட்டது.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது மற்றும் பல்வேறு நிலைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் சமாளிப்பது இதன் நோக்கமாகும்.

இதன் பதிவு அலுவலகம் 116/71, அப்பர்சுவாமி கோயில் தெரு, மயிலாப்பூர். அலுவலக ஊழியர்களை 92824 01503 என்ற எண்ணில் அல்லது pennindia2020@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தை திருமணம் போன்ற பிரச்சனைகளை மக்களுக்கு நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக இந்த தொண்டு நிறுவனம் கூறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு தற்காப்பு நுட்பங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு குறித்த பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தொண்டு நிறுவனம் தனது இரண்டாம் ஆண்டு விழாவை மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் கொண்டாடியது. ஆண்டு விழாவில் ஓய்வுபெற்ற டிஜிபி எஸ்.ஆர. ஜாங்கிட், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ஓய்வுபெற்ற கூடுதல் தலைமைச் செயலாளர் டி.சபிதா, பாடகர் பி. உன்னிகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகை ரேவதி, ஜிஜி மருத்துவமனையின் கமலா செல்வராஜ் மற்றும் யுனெஸ்கோவின் மூத்த ஆலோசகர் வெங்கட்ராமன். ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பின்னணி பாடகி கே எஸ் சித்ரா கலந்து கொண்டார்.

பாடகி கே எஸ் சித்ரா PENN க்கான கீதத்தை பாடியுள்ளார் – இந்த பாடல் அவரது முன்னிலையில் நிகழ்வில் வெளியிடப்பட்டது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago