மயிலாப்பூரில் பி.எஸ்.பள்ளி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் அனுமதி உண்டு.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இந்த மைதானத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினர்.
பி.எஸ்.பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்ட இந்த மைதானம் சமீபத்தில் இந்து சமய அறநிலையத்துறையால் குத்தகை ஒப்பந்தத்தை பள்ளியால் முழுமையாக நிறைவேற்ற முடியாததால் மீட்டெடுக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா. வேலு ஆகியோர் இளைஞர்கள் இங்கு பல விளையாட்டுகளை விளையாடும் வகையில் மைதானத்தின் சில பகுதிகளை புதுப்பிப்பதாக உறுதியளித்தனர். சில மணிநேரங்களில், விளையாட்டு மைதானத்தை பி.எஸ்.பள்ளி மாணவர்களும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த விளையாட்டு மைதானம் உள்ளூரில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது, ஏராளமான பதின்ம வயதினர் இங்கு கிரிக்கெட் விளையாடியுள்ளனர் மற்றும் இந்த மைதானத்தில் விளையாண்ட சிலர் கிரிக்கெட்டில் தங்களுக்கென்று ஒரு பெயரை உருவாக்கியுள்ளனர்.
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…
ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…