முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் காலமானார்.

தமிழ்நாடு மாநில முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் ஜூலை 11 அன்று காலமானார். இவருக்கு வயது 86.

சமீபத்தில், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு, மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலையில் உள்ள தனது குடியிருப்பை (அருண் பிளாட்ஸில்) அன்பளிப்பாக அளித்து, பின்னர், மற்றொரு சொத்தை புற்றுநோய் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் படித்து ஜூனியர் லெவல் கிரிக்கெட்டில் முத்திரை பதித்தார், பின்னர் அவர் சிறந்த வேகமான ஆஃப் ஸ்பின்னராக அறியப்பட்டார்.

இவர் இரண்டு தசாப்தங்களாக ஸ்டேட் வங்கிக்காக முதல் டிவிஷன் கிரிக்கெட்டில் விளையாடினார், மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய உயர்நிலை அகில இந்திய ஸ்டேட் வங்கி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1963 – 64 இல், உள்ளூர் கிரிக்கெட் சீசனில் SBIக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். 1996ல் வங்கியின் ஏஜிஎம் ஆக இருந்து ஓய்வு பெற்றார்.

2021 இன் பிற்பகுதியில் ரஞ்சி கிரிக்கெட் வீரரான இவரது மகன் வசந்தை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்ற அன்று இரவு வெறும் 45 வயதில் இழந்தார். சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார்.

பின்னர் சந்திரசேகரன் தனது குடியிருப்பின் ஆவணங்களின் நகல்களை மடத்திற்கு ஆதரவாக பதிவு செய்வதற்காக ஒப்படைத்தார். அவரது சகோதரர் ஆர். மோகன், முன்னாள் தமிழக மாநில கால்பந்து வீரர், மடத்திடம் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவருடன் இருந்தார். ஒப்பந்தத்தின்படி, அவர் இறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு மடம் அவரது குடியிருப்பை எடுத்துக் கொள்ளலாம்.

சந்திரசேகரன் தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டில் பன்முக ஆளுமையாக இருந்துள்ளார்.

இவர் முதல் தர மட்டைப்பந்து வீரர், நடுவர், போட்டி நடுவர், TNCA இன் பொருளாளர், ஸ்கோரர், தேர்வாளர், மாநில அணியின் மேலாளர், பல TNCA லீக் அணிகளின் உரிமையாளராக, TNCA இன் குழு உறுப்பினர் மற்றும் வெளிநாடுகளில் அணிகளை எடுத்த குளோப் டிராட்டர். என்று பலமுக திறமைகளை கொண்டவர்.

பி.எஸ். பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார்.

கடந்த வாரம், மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.

செய்தி : எஸ். பிரபு

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

4 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

5 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago