முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் காலமானார்.

தமிழ்நாடு மாநில முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் TNCA அதிகாரியுமான R. சந்திரசேகரன் ஜூலை 11 அன்று காலமானார். இவருக்கு வயது 86.

சமீபத்தில், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திற்கு, மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட சாலையில் உள்ள தனது குடியிருப்பை (அருண் பிளாட்ஸில்) அன்பளிப்பாக அளித்து, பின்னர், மற்றொரு சொத்தை புற்றுநோய் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.

மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தா கல்லூரியில் படித்து ஜூனியர் லெவல் கிரிக்கெட்டில் முத்திரை பதித்தார், பின்னர் அவர் சிறந்த வேகமான ஆஃப் ஸ்பின்னராக அறியப்பட்டார்.

இவர் இரண்டு தசாப்தங்களாக ஸ்டேட் வங்கிக்காக முதல் டிவிஷன் கிரிக்கெட்டில் விளையாடினார், மேலும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களை உள்ளடக்கிய உயர்நிலை அகில இந்திய ஸ்டேட் வங்கி அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். 1963 – 64 இல், உள்ளூர் கிரிக்கெட் சீசனில் SBIக்காக 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்தார். 1996ல் வங்கியின் ஏஜிஎம் ஆக இருந்து ஓய்வு பெற்றார்.

2021 இன் பிற்பகுதியில் ரஞ்சி கிரிக்கெட் வீரரான இவரது மகன் வசந்தை ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற்ற அன்று இரவு வெறும் 45 வயதில் இழந்தார். சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை இழந்தார்.

பின்னர் சந்திரசேகரன் தனது குடியிருப்பின் ஆவணங்களின் நகல்களை மடத்திற்கு ஆதரவாக பதிவு செய்வதற்காக ஒப்படைத்தார். அவரது சகோதரர் ஆர். மோகன், முன்னாள் தமிழக மாநில கால்பந்து வீரர், மடத்திடம் ஆவணங்களை ஒப்படைக்கும் போது அவருடன் இருந்தார். ஒப்பந்தத்தின்படி, அவர் இறந்த ஒரு மாதத்திற்குப் பிறகு மடம் அவரது குடியிருப்பை எடுத்துக் கொள்ளலாம்.

சந்திரசேகரன் தனது வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட்டில் பன்முக ஆளுமையாக இருந்துள்ளார்.

இவர் முதல் தர மட்டைப்பந்து வீரர், நடுவர், போட்டி நடுவர், TNCA இன் பொருளாளர், ஸ்கோரர், தேர்வாளர், மாநில அணியின் மேலாளர், பல TNCA லீக் அணிகளின் உரிமையாளராக, TNCA இன் குழு உறுப்பினர் மற்றும் வெளிநாடுகளில் அணிகளை எடுத்த குளோப் டிராட்டர். என்று பலமுக திறமைகளை கொண்டவர்.

பி.எஸ். பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்தார்.

கடந்த வாரம், மயிலாப்பூர் டைம்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தார்.

செய்தி : எஸ். பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

3 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago