செய்திகள்

நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் பாழடைந்த குடியிருப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

மயிலாப்பூர், நாட்டான் தோட்டத்தில் குடிசை மாற்று வாரியத்தின் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளம் படிக்கட்டு வியாழக்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.

குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை பார்வையிட்டனர்.

நாட்டன் தோட்டம் என்பது பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய (அதன் கிழக்குப் பகுதியில்) திருவள்ளுவர் கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு காலனி ஆகும்.

1970களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட நான்கு பிளாக்குகளில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வந்ததாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர். காலனியை மீண்டும் புதுப்பிப்பதற்க்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துடனான இறுதி ஒப்பந்தத்திற்க்கு பின்னர் பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு வெளியேறினர்.

ஆனால் சுமார் 40 குடும்பங்கள் பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து தங்கி ஆபத்தை எதிர்கொண்டனர். வியாழன் இரவு நடந்த சம்பவம் இது போன்ற முதல் சம்பவம் என்று கூறப்படுகிறது. இப்போது, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வெளியே செல்ல வற்புறுத்துகிறார்கள்.

இங்கு வசிக்கும் தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மார்ச் 30-ம் தேதி குடிசை மாற்று வாரியத்தின் ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று உள்ளூர் வளாக சமூக சங்க உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், ஆர்.நடராஜ் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டாலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக, அவை கிடப்பில் போடப்பட்டன.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

18 hours ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

19 hours ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

19 hours ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

2 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

2 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

3 days ago