நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிலர் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பார்க்கவும், கலைஞர்களுடன் உரையாடவும், அவர்கள் ஈர்க்கும் ஓவியங்களை வாங்கியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது; நடைபாதையின் ஒரு பகுதி காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும் செஸ் சதுக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவை சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்திய மற்றும் ரூ.2000 – ரூ.3000 விலை வரம்பில் விலை நிர்ணயம் செய்த கலைஞர்கள் தாங்களது சில ஓவிய படைப்புகளை விற்றதாகவும் மற்றும் சிலருக்கு புதிதாக புதிதாக வழங்க முன்பதிவு செய்ததாகவும் கூறினர்.

ஷோகேஸ் அல்லது மேசையில் வைக்கக்கூடிய சிறிய படைப்புகளை வழங்கிய மற்றவர்களும் விற்பனை நன்றாக நடைபெற்றது.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விழாவை எடிட்டர்-பப்ளிஷர் வின்சென்ட் டி’சோசா மற்றும் கலைஞர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆர்வமுள்ள நகர மற்றும் வெளியூரில் உள்ள கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஓவிய விழா (ஆர்ட் பெஸ்ட்) தொடர் கோடையில் (மே / ஜூன்) மாதங்களில் அதன் அடுத்த நிகழ்ச்சியை வட சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவிலும், ஆகஸ்ட் மாதத்தில் தி.நகர் அல்லது பாண்டி பஜாரில் உள்ள பூங்காவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்விற்கு பின்தளத்தில் இருந்து ஆதரவை வழங்கியது மற்றும் இந்த பூங்காவை சுந்தரம் பைனான்ஸ் நிர்வகித்து பராமரிக்கிறது.

கலைஞர்கள் – தொழில்முறை, அமெச்சூர், பொழுதுபோக்கு மற்றும் மாணவர்கள் – மேலும் ஓவிய விழா பற்றிய தகவல்களைப் பெற பேஸ்புக் பக்கத்தில் இணையவும். https://www.facebook.com/artmartchennai

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

2 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

2 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

2 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

1 day ago