நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிலர் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பார்க்கவும், கலைஞர்களுடன் உரையாடவும், அவர்கள் ஈர்க்கும் ஓவியங்களை வாங்கியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது; நடைபாதையின் ஒரு பகுதி காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும் செஸ் சதுக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவை சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்திய மற்றும் ரூ.2000 – ரூ.3000 விலை வரம்பில் விலை நிர்ணயம் செய்த கலைஞர்கள் தாங்களது சில ஓவிய படைப்புகளை விற்றதாகவும் மற்றும் சிலருக்கு புதிதாக புதிதாக வழங்க முன்பதிவு செய்ததாகவும் கூறினர்.

ஷோகேஸ் அல்லது மேசையில் வைக்கக்கூடிய சிறிய படைப்புகளை வழங்கிய மற்றவர்களும் விற்பனை நன்றாக நடைபெற்றது.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விழாவை எடிட்டர்-பப்ளிஷர் வின்சென்ட் டி’சோசா மற்றும் கலைஞர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆர்வமுள்ள நகர மற்றும் வெளியூரில் உள்ள கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஓவிய விழா (ஆர்ட் பெஸ்ட்) தொடர் கோடையில் (மே / ஜூன்) மாதங்களில் அதன் அடுத்த நிகழ்ச்சியை வட சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவிலும், ஆகஸ்ட் மாதத்தில் தி.நகர் அல்லது பாண்டி பஜாரில் உள்ள பூங்காவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்விற்கு பின்தளத்தில் இருந்து ஆதரவை வழங்கியது மற்றும் இந்த பூங்காவை சுந்தரம் பைனான்ஸ் நிர்வகித்து பராமரிக்கிறது.

கலைஞர்கள் – தொழில்முறை, அமெச்சூர், பொழுதுபோக்கு மற்றும் மாணவர்கள் – மேலும் ஓவிய விழா பற்றிய தகவல்களைப் பெற பேஸ்புக் பக்கத்தில் இணையவும். https://www.facebook.com/artmartchennai

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago