நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிலர் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பார்க்கவும், கலைஞர்களுடன் உரையாடவும், அவர்கள் ஈர்க்கும் ஓவியங்களை வாங்கியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது; நடைபாதையின் ஒரு பகுதி காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும் செஸ் சதுக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவை சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்திய மற்றும் ரூ.2000 – ரூ.3000 விலை வரம்பில் விலை நிர்ணயம் செய்த கலைஞர்கள் தாங்களது சில ஓவிய படைப்புகளை விற்றதாகவும் மற்றும் சிலருக்கு புதிதாக புதிதாக வழங்க முன்பதிவு செய்ததாகவும் கூறினர்.

ஷோகேஸ் அல்லது மேசையில் வைக்கக்கூடிய சிறிய படைப்புகளை வழங்கிய மற்றவர்களும் விற்பனை நன்றாக நடைபெற்றது.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விழாவை எடிட்டர்-பப்ளிஷர் வின்சென்ட் டி’சோசா மற்றும் கலைஞர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆர்வமுள்ள நகர மற்றும் வெளியூரில் உள்ள கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஓவிய விழா (ஆர்ட் பெஸ்ட்) தொடர் கோடையில் (மே / ஜூன்) மாதங்களில் அதன் அடுத்த நிகழ்ச்சியை வட சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவிலும், ஆகஸ்ட் மாதத்தில் தி.நகர் அல்லது பாண்டி பஜாரில் உள்ள பூங்காவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்விற்கு பின்தளத்தில் இருந்து ஆதரவை வழங்கியது மற்றும் இந்த பூங்காவை சுந்தரம் பைனான்ஸ் நிர்வகித்து பராமரிக்கிறது.

கலைஞர்கள் – தொழில்முறை, அமெச்சூர், பொழுதுபோக்கு மற்றும் மாணவர்கள் – மேலும் ஓவிய விழா பற்றிய தகவல்களைப் பெற பேஸ்புக் பக்கத்தில் இணையவும். https://www.facebook.com/artmartchennai

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago