அபிராமபுரம் 4வது தெருவில் கடந்த மாதம் ராகாஸ் காபி கடை திறக்கப்பட்டது. வாடிக்கையாளரின் விருப்பப்படி வறுத்த விதைகள் புதிதாக அரைக்கப்பட்டு கொடுக்கும் நன்கு வடிவமைக்கப்பட்ட சிறிய இடமாகும்
இந்த கடையில் பல்வேறு அளவுகளில் அரைத்து கொடுக்க தயாராகவுள்ளது.
வெவ்வேறு தேநீர் தயாரிக்கும் பாணிகள் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்களையும் வாடிக்கையாளரால் தேர்ந்தெடுக்க முடியும். ராகாஸ் காபியானது பல்வேறு வகையான காபி மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு கலவைகளைக் கொண்டுள்ளது, அதுவே அதன் தனித்தன்மை ஆகும்.
கடையின் பெயரில் ஒரு இசையின் சின்னம் உள்ளது. மயிலாப்பூரைச் சேர்ந்த ராகஸின் சுரேஷ் ராமநாதன், “இசைக்கும் காபிக்கும் இடையே ஆழமான தொடர்பு இருக்கிறது” என்கிறார்.
“காபி தூள் விற்பதை விட, காபியின் உண்மைகளை யார் வந்தாலும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சிக்கரி குறைவு, பால் மற்றும் சர்க்கரை இல்லாத காபி உண்மையான சுவையைத் தருகிறது, அதுதான் நல்ல காபியின் ரகசியம்,” என்கிறார் சுரேஷ்.
இந்தியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களிலும், அமெரிக்காவைச் சேர்ந்த பயணக் கப்பல்களிலும் 15 ஆண்டுகளாகப் பணியாற்றிய அவர், கடந்த ஆண்டுகளில் சேகரித்த காபி பற்றிய தகவல்களை ராகாஸின் சுவர்களில் நிரப்பியுள்ளார்.
ஸ்டராங் பில்டர் காபி பிரியர்களுக்கு, 80:20, 70:30 மற்றும் 60:40 போன்ற விகிதங்களின் தனிப்பயனாக்கப்பட்ட சிக்கரி கலவைகள் கிடைக்கின்றன.
ராகஸ் காபி, எண் : 28, அபிராமபுரம் 4வது தெரு, மயிலாப்பூர், சி பி ராமசாமி சாலை சந்திப்புக்கு அருகில் உள்ளது. போன்: 9840334813
செய்தி: வி.சௌந்தரராணி
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…