நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிலர் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பார்க்கவும், கலைஞர்களுடன் உரையாடவும், அவர்கள் ஈர்க்கும் ஓவியங்களை வாங்கியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது; நடைபாதையின் ஒரு பகுதி காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும் செஸ் சதுக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவை சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்திய மற்றும் ரூ.2000 – ரூ.3000 விலை வரம்பில் விலை நிர்ணயம் செய்த கலைஞர்கள் தாங்களது சில ஓவிய படைப்புகளை விற்றதாகவும் மற்றும் சிலருக்கு புதிதாக புதிதாக வழங்க முன்பதிவு செய்ததாகவும் கூறினர்.

ஷோகேஸ் அல்லது மேசையில் வைக்கக்கூடிய சிறிய படைப்புகளை வழங்கிய மற்றவர்களும் விற்பனை நன்றாக நடைபெற்றது.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விழாவை எடிட்டர்-பப்ளிஷர் வின்சென்ட் டி’சோசா மற்றும் கலைஞர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆர்வமுள்ள நகர மற்றும் வெளியூரில் உள்ள கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஓவிய விழா (ஆர்ட் பெஸ்ட்) தொடர் கோடையில் (மே / ஜூன்) மாதங்களில் அதன் அடுத்த நிகழ்ச்சியை வட சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவிலும், ஆகஸ்ட் மாதத்தில் தி.நகர் அல்லது பாண்டி பஜாரில் உள்ள பூங்காவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்விற்கு பின்தளத்தில் இருந்து ஆதரவை வழங்கியது மற்றும் இந்த பூங்காவை சுந்தரம் பைனான்ஸ் நிர்வகித்து பராமரிக்கிறது.

கலைஞர்கள் – தொழில்முறை, அமெச்சூர், பொழுதுபோக்கு மற்றும் மாணவர்கள் – மேலும் ஓவிய விழா பற்றிய தகவல்களைப் பெற பேஸ்புக் பக்கத்தில் இணையவும். https://www.facebook.com/artmartchennai

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago