நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நடைபெற்ற ஓவிய விழாவில் 80 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

லஸ்ஸில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய விழா 2023 (ஆர்ட் பெஸ்ட்) சென்னையின் 4வது பதிப்பில் 80க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். காஞ்சிபுரம், தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சிலர் பங்கேற்றனர்.

காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அனைத்து வகையான கலைஞர்களும் தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் நூற்றுக்கணக்கான படைப்புகளைப் பார்க்கவும், கலைஞர்களுடன் உரையாடவும், அவர்கள் ஈர்க்கும் ஓவியங்களை வாங்கியும் சென்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கான இடத்தை சென்னை மாநகராட்சி வழங்கியது; நடைபாதையின் ஒரு பகுதி காட்சிகளுக்காக பயன்படுத்தப்பட்டது.

மேலும் செஸ் சதுக்கத்தில், பள்ளி மாணவர்களுக்கான மூன்று ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இவை சுமார் 200 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கச்சிதமான படைப்புகளைக் காட்சிப்படுத்திய மற்றும் ரூ.2000 – ரூ.3000 விலை வரம்பில் விலை நிர்ணயம் செய்த கலைஞர்கள் தாங்களது சில ஓவிய படைப்புகளை விற்றதாகவும் மற்றும் சிலருக்கு புதிதாக புதிதாக வழங்க முன்பதிவு செய்ததாகவும் கூறினர்.

ஷோகேஸ் அல்லது மேசையில் வைக்கக்கூடிய சிறிய படைப்புகளை வழங்கிய மற்றவர்களும் விற்பனை நன்றாக நடைபெற்றது.

மூன்று வருட இடைவெளிக்கு பிறகு நடந்த இந்த விழாவை எடிட்டர்-பப்ளிஷர் வின்சென்ட் டி’சோசா மற்றும் கலைஞர், விமர்சகர் மற்றும் எழுத்தாளர் கணபதி சுப்பிரமணியம் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

ஆர்வமுள்ள நகர மற்றும் வெளியூரில் உள்ள கலைஞர்களின் வேண்டுகோளுக்கிணங்க, ஓவிய விழா (ஆர்ட் பெஸ்ட்) தொடர் கோடையில் (மே / ஜூன்) மாதங்களில் அதன் அடுத்த நிகழ்ச்சியை வட சென்னையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவிலும், ஆகஸ்ட் மாதத்தில் தி.நகர் அல்லது பாண்டி பஜாரில் உள்ள பூங்காவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மயிலாப்பூர் டைம்ஸ் இந்த நிகழ்விற்கு பின்தளத்தில் இருந்து ஆதரவை வழங்கியது மற்றும் இந்த பூங்காவை சுந்தரம் பைனான்ஸ் நிர்வகித்து பராமரிக்கிறது.

கலைஞர்கள் – தொழில்முறை, அமெச்சூர், பொழுதுபோக்கு மற்றும் மாணவர்கள் – மேலும் ஓவிய விழா பற்றிய தகவல்களைப் பெற பேஸ்புக் பக்கத்தில் இணையவும். https://www.facebook.com/artmartchennai

admin

Recent Posts

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா. மே 21ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 28ல் தேர் திருவிழா.

ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…

4 days ago

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான திரு. பி. வெங்கட்ரமணன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை.

மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…

1 week ago

ஆர். ஏ. புரத்திலுள்ள டாஸ்மாக் ‘எலைட்’ கடையை மூட வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை.

ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…

2 weeks ago

மந்தைவெளியில் உள்ள டாஸ்மாக் மது விற்பனைக் கடை நிரந்தரமாக மூடப்பட்டது.

மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…

2 weeks ago

இந்த டிரை கிளீனிங் வாகனம் வீட்டு வாசலுக்கே வந்து சேவை வழங்குகிறது.

உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…

2 weeks ago

தயாராகி வரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம்.

சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…

2 weeks ago