மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கொடிகள், திரை சிலைகள் மற்றும் சுவாமி வீதி உலா வாகனங்கள் சரி செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பங்குனி திருவிழா நேரத்தில் தேனாம்பேட்டை மயிலாப்பூர் மண்டலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
சில பேர் இந்த திருவிழாவை தள்ளிவைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தேர்த்திருவிழாவும், அறுபத்து மூவர் வீதி உலாவும் குறைந்த அளவிலான மக்கள் பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி பொதுமக்கள் பேசி வருகிறார்களே தவிர கொரோனா விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. கோவில்களுக்கு வருபவர்கள் தற்போது பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து வருவதில்லை.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…