மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த வருட பங்குனி பிரம்மோற்சவ திருவிழா நாளை மதியம் ஊர்க்காவல் தேவதை பூஜையுடன் கோலவிழியம்மன் கோவிலில் நடைபெறவுள்ளது. இது பங்குனி திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாகும். இதற்கு அடுத்தபடியாக வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு கோவில்களில் கொடிகள், திரை சிலைகள் மற்றும் சுவாமி வீதி உலா வாகனங்கள் சரி செய்யும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பங்குனி திருவிழா நேரத்தில் தேனாம்பேட்டை மயிலாப்பூர் மண்டலத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது.
சில பேர் இந்த திருவிழாவை தள்ளிவைத்திருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் தேர்த்திருவிழாவும், அறுபத்து மூவர் வீதி உலாவும் குறைந்த அளவிலான மக்கள் பங்கேற்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் இதுபற்றி பொதுமக்கள் பேசி வருகிறார்களே தவிர கொரோனா விதிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை. கோவில்களுக்கு வருபவர்கள் தற்போது பெரும்பாலும் முகக்கவசம் அணிந்து வருவதில்லை.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…