கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை இந்த கிளினிக்கில் எவ்வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக மக்களுக்கு தடுப்பூசிகள் முதல் சுற்று மற்றும் சிலருக்கு இரண்டாம் சுற்று போடப்பட்டது. இது மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் தொடர்பு இடைவெளி இருப்பதை காட்டுகிறது.

கொஞ்ச நாட்களாக காலையில் சுகாதார ஊழியர்கள் கிளினிக்குகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் வாங்கியவர்களுக்கு தடுப்பூசி கிளினிக்குகளுக்கு வந்தவுடன் வரிசையாக வழங்குவர். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதிக நேரம் மூத்த குடிமக்கள் கிளினிக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் காலை உணவை வீட்டிலிருந்து எடுத்துவருகின்றனர் சிலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டவுடன் மீண்டும் கிளினிக்கிற்கு வரவேண்டியுள்ளது. இரண்டாவது பிரச்சனை இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை தடுப்பூசிகள் மையத்திற்கு வரும் என்ற விவரம் தெரிவதில்லை, ஆனால் தோராயமாக டோக்கன் வழங்குகின்றனர். இதனால் சில சமயங்களில் டோக்கன் அதிகமாக வழங்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது.

.மேலும் இங்கு சரியான அறிவிப்பு பலகைகள் இல்லை. அதேபோல தடுப்பூசி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் ஏற்கனெவே எந்த வகை தடுப்பூசி போட்டுக்கொண்டனரோ அதே வகை தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த செய்தி பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அங்கு தடுப்பூசி இருப்பு உள்ளதா என்ற விவரமும் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும்போது மட்டுமே தெரியவருகிறது, இதனாலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொருநாளும் பல கிளினிக்குகளில் ஏற்படுகிறது. இதனால் சில நாள் கிளினிக்குகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில நாள் கூட்டமில்லாமல் காணப்படுகிறது.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

1 week ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago