கொரோனா தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் மக்களுக்கு ஏற்படும் பலவிதமான குழப்பங்கள்

சென்னை மாநகராட்சி நடத்தும் தடுப்பூசி போடும் கிளினிக்குகளில் தினமும் புதுப்புது குழப்பங்கள் ஏற்படுகிறது. ஆழ்வார்பேட்டையிலுள்ள கிளினிக்கில் நேற்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று காலை இந்த கிளினிக்கில் எவ்வித குழப்பமும் இல்லாமல் அமைதியாக மக்களுக்கு தடுப்பூசிகள் முதல் சுற்று மற்றும் சிலருக்கு இரண்டாம் சுற்று போடப்பட்டது. இது மக்களுக்கும் சுகாதாரத்துறைக்கும் தொடர்பு இடைவெளி இருப்பதை காட்டுகிறது.

கொஞ்ச நாட்களாக காலையில் சுகாதார ஊழியர்கள் கிளினிக்குகளில் டோக்கன் வழங்கி வருகின்றனர். டோக்கன் வாங்கியவர்களுக்கு தடுப்பூசி கிளினிக்குகளுக்கு வந்தவுடன் வரிசையாக வழங்குவர். இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதிக நேரம் மூத்த குடிமக்கள் கிளினிக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. சிலர் காலை உணவை வீட்டிலிருந்து எடுத்துவருகின்றனர் சிலர் வீட்டிற்கு சென்று சாப்பிட்டவுடன் மீண்டும் கிளினிக்கிற்கு வரவேண்டியுள்ளது. இரண்டாவது பிரச்சனை இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் எத்தனை தடுப்பூசிகள் மையத்திற்கு வரும் என்ற விவரம் தெரிவதில்லை, ஆனால் தோராயமாக டோக்கன் வழங்குகின்றனர். இதனால் சில சமயங்களில் டோக்கன் அதிகமாக வழங்கும்போது பிரச்சனை ஏற்படுகிறது.

.மேலும் இங்கு சரியான அறிவிப்பு பலகைகள் இல்லை. அதேபோல தடுப்பூசி இரண்டாவது சுற்று போட வருபவர்கள் ஏற்கனெவே எந்த வகை தடுப்பூசி போட்டுக்கொண்டனரோ அதே வகை தடுப்பூசியைத்தான் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த செய்தி பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே தெரிந்தாலும் அங்கு தடுப்பூசி இருப்பு உள்ளதா என்ற விவரமும் டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும்போது மட்டுமே தெரியவருகிறது, இதனாலும் பிரச்னைகள் ஏற்படுகிறது. இது போன்ற பிரச்சனைகள் ஒவ்வொருநாளும் பல கிளினிக்குகளில் ஏற்படுகிறது. இதனால் சில நாள் கிளினிக்குகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. சில நாள் கூட்டமில்லாமல் காணப்படுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

12 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

2 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago