விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. கோவிலுக்குள் மக்கள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றாலும், மக்கள் கோவிலுக்கு வெளியே தங்கள் பிரார்த்தனைகளை செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், லஸ் நவசக்தி விநாயகர் கோவில், ஆர்.ஏ.புரம் சித்திபுத்தி விநாயகர் கோவில் போன்ற கோவில்களில் மக்கள் கோவிலுக்கு வெளியே தங்களுடைய வேண்டுதல்களை செய்தனர். மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை என்றாலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் கோவிலுக்குள் நடைபெற்றது. கோவில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை எட்டு மணியளவில் கபாலீஸ்வரர் கோவிலில் தனியார் ஒருவரின் திருமணம் நடந்தது. விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் வேளையில் கோவிலுக்குள் திருமணத்திற்கு சென்ற மக்களை எவ்வாறு அனுமதித்தனர் என்று சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…