Categories: ருசி

மெதுவாக இயங்கி வரும் பிரபலமான உணவகமான மாமி டிபன் ஸ்டால்.

மயிலாப்பூரில் பிச்சுப்பிள்ளை தெருவில் உள்ள பிரபலமான உணவகம் மாமி டிபன் ஸ்டால் ஊரடங்கின் போது வியாபாரம் வெகுவாகக் குறைந்தது.

கடந்த 12 மாதங்களில், மாமி டிபன் ஸ்டால் முந்தைய கோவிட் நேரங்களுடன் ஒப்பிடும்போது ஐம்பது சதவீதமே இயங்கி வந்தது.

மயிலாப்பூர் டைம்ஸுடன் பேசிய கடையின் உரிமையாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காபி மற்றும் சமோசா மட்டுமே வேகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கிறார்.

இங்கு பாப்புலர் உணவான தோசை, போண்டா மற்றும் பஜ்ஜி கூட ஊரடங்கு காலத்தில் குறைந்தளவு விற்பனையே நடைபெறுகிறது.

விற்பனை மந்தநிலைக்கு மிகப்பெரிய காரணம் உள்ளூர் கோயில்கள் மூடப்பட்டதே என்று அவர் கூறுகிறார்.

பிரதோஷம் மற்றும் பவுர்ணமி போன்ற நாட்களில் மக்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வரும்போது, ​​இந்த கடையில் விற்பனை அதிகரித்து காணப்படும் என்றும், ஆனால் கடந்த ஏப்ரல் கடைசி வாரத்தில் கோயில்களில் பக்தர்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 45 நாட்களில் வியாபாரத்தில் ஒரு பெரிய வீழ்ச்சியைக் கண்டோம் என்று உரிமையாளர் கூறுகிறார்.

மூத்த குடிமக்கள் எங்கள் கடையின் முக்கிய வாடிக்கையாளர்கள். ஆனால் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தற்போது அனுமதி இல்லை. கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அவர்கள் மாலை டிஃபின் மற்றும் காபிக்காக எங்கள் கடைக்கு வருவார்கள்.அதே நேரத்தில் இப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

சாதாரண காலங்களில், இந்த கோவில் வரும் பக்தர்கள் இந்த உணவகத்திற்கு வருவார்கள் அவ்வாறு வரும்போது இந்த பகுதியில் கூட்ட நெரிசல் இருக்கும். ஆனால் அது இப்போது குறைந்துவிட்டது.

இப்போது மாமி டிபன் ஸ்டாலில் பார்சல் சேவை மட்டுமே வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

3 hours ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 day ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

3 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

5 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

7 days ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

1 week ago