கடந்த ஆண்டு இதே நேரத்தில், பிரதோஷ மாலையில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பிரகாரத்தை சுற்றிவருவதற்கு கொரோனா 2வது அலையை தொடர்ந்து நெறிமுறையின் ஒரு பகுதியாக, பக்தர்கள் பிரதோஷ ஊர்வலத்தை தரிசனம் செய்ய உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
பிரதோஷ மூர்த்தி கோவில் உள்ளே வாசலை கடந்து செல்லும் போது, கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில்களில் பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய முயன்றதாக மயிலாப்பூர் டைம்ஸில் செய்திகள்ஏற்கனெவே வெளியாகியுள்ளன.(https://www.mylaporetimes.com/2021/07/devotees-not-to-be-allowed-for-next-pradosham-at-sri-kapali-temple-safety-measure/). பக்தர்கள் நீண்ட நேரம் நின்று கோவிலுக்கு வெளியில் இருந்து ஓதுவாரின் பாராயணத்தை கேட்டனர்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 24, 2022) மாலை வாழ்க்கை நல்ல நாட்களுக்குத் திரும்பியதற்கான சாட்சி. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நந்தி அபிேஷகத்தை தொடர்ந்து ஊர்வலத்தையும் தரிசனம் செய்தனர்.
ஊர்வலத்தின் மூன்று சுற்றுகளின் போது ஒவ்வொரு வேதங்களையும் வழங்கும் வெவ்வேறு குழுக்களுடன் வேத பாராயணமும் மற்றும் தேவாரம் பாடல்களை பாடும் குழுவும் இருந்தது.
அலங்கார மண்டபத்தின் முன் ஓதுவார் சத்குருநாதன் திருமந்திரம் முழங்க, பரம்பரை அர்ச்சகர் தீபாராதனை செய்தபோது ஏகமாக
பக்தர்களின் கூப்பிய கரங்கள் இருந்தது.
மூன்றாவது சுற்று ஊர்வலத்தில் மோகன் தாஸின் நாதஸ்வரத்திற்கு ஏற்ப ஸ்ரீபாதம் தங்கிகள் வொயாலி காட்சியை அளித்தனர்.
– செய்தி மற்றும் புகைப்படம் எஸ்.பிரபு
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…