ராதா சுவாமியின் சிறப்பு மையம் திறப்பு. இதன் மூலம் மூன்று சிவசாமி குழு பள்ளிகளின் மாணவர்கள் உட்புற விளையாட்டு, ரோபாட்டிக்ஸ், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் பயிற்சியை பெறுவார்கள்.

மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட வீதியில் ஒரு காலத்தில் இருந்த பள்ளி இப்போது ‘சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்’.

திங்கள்கிழமை மாலை (டிசம்பர் 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக அவர் ஒரு பலகையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு தளமும் ஒரு செயல்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட்டுள்ளதை அவர் பார்வையிட்டார்.

அறிவியல் கற்றலுக்கு ஒரு தளம், டேபிள் டென்னிஸ், கேரம் மற்றும் செஸ் ஆகியவற்றுக்கு ஒன்று, இசை மற்றும் நடனம் மற்றும் கலைகளுக்கு ஒன்று, போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளிப்பதற்காக ஒன்று, இந்திய பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க ஒரு இடம் – இவை அனைத்தும் மூன்று பள்ளிகளில் படிக்கும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கானது. மயிலாப்பூரில் உள்ள தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள்.

பள்ளிகள் – லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி. சர் சிவசாமி கலாலயா சீனியர் பள்ளி மற்றும் சிவசாமி கலாலயா மேல்நிலை பள்ளி.

இந்தப் பள்ளிகளின் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், சில சமயங்களில், பயிற்சி மாலை தாமதமாக நடைபெறும் – உதாரணமாக டேபிள் டென்னிஸ்.

இந்த இடத்தை ரீமேக் செய்து தனது தாயார் ராதா சுவாமிக்கு அர்பணித்துள்ளதாகவும், இந்த பள்ளிகள் இசை மற்றும் நடனம் மற்றும் விளையாட்டுகளை வழங்குகிறது. இவற்றில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும், மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும், அதற்கான இடம் இதுதான். என்று இந்த பள்ளிகளை நிர்வகித்து வரும் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே சுவாமி கூறுகிறார்.

திங்கட்கிழமை நிகழ்வானது மூன்று பள்ளிகளின் முதல்வர்கள் , மற்றும் ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கான இடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுவாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் எஸ்.ஸ்ரீதரன், செயலர் வத்சலா நாராயணசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்து பேசினர்.

admin

Recent Posts

‘இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்’ – ஒரு காவல்துறை அதிகாரியின் உரை. மார்ச் 21ல்

'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…

4 hours ago

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம். மார்ச் 22.

நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…

1 day ago

உள்ளூர் தபால் நிலையங்களில் ஸ்பீட் போஸ்ட் (Speed ​​Post) வழங்கும் புதிய சேவைகள். முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்தில் விநியோகம்.

ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

3 days ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

4 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

5 days ago