ராதா சுவாமியின் சிறப்பு மையம் திறப்பு. இதன் மூலம் மூன்று சிவசாமி குழு பள்ளிகளின் மாணவர்கள் உட்புற விளையாட்டு, ரோபாட்டிக்ஸ், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றில் பயிற்சியை பெறுவார்கள்.

மந்தைவெளிப்பாக்கம் மேற்கு வட்ட வீதியில் ஒரு காலத்தில் இருந்த பள்ளி இப்போது ‘சென்டர் ஃபார் எக்ஸலன்ஸ்’.

திங்கள்கிழமை மாலை (டிசம்பர் 6) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ராதா சுவாமிகள் சிறப்பு மையத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்த நிகழ்வை குறிக்கும் விதமாக அவர் ஒரு பலகையைத் திறந்து வைத்தார். ஒவ்வொரு தளமும் ஒரு செயல்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட்டுள்ளதை அவர் பார்வையிட்டார்.

அறிவியல் கற்றலுக்கு ஒரு தளம், டேபிள் டென்னிஸ், கேரம் மற்றும் செஸ் ஆகியவற்றுக்கு ஒன்று, இசை மற்றும் நடனம் மற்றும் கலைகளுக்கு ஒன்று, போட்டித் தேர்வுகளில் பயிற்சி அளிப்பதற்காக ஒன்று, இந்திய பாரம்பரிய விளையாட்டுகளைக் கற்க ஒரு இடம் – இவை அனைத்தும் மூன்று பள்ளிகளில் படிக்கும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கானது. மயிலாப்பூரில் உள்ள தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கல்விச் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் பள்ளிகள்.

பள்ளிகள் – லேடி சிவஸ்வாமி ஐயர் பெண்கள் பள்ளி. சர் சிவசாமி கலாலயா சீனியர் பள்ளி மற்றும் சிவசாமி கலாலயா மேல்நிலை பள்ளி.

இந்தப் பள்ளிகளின் மாணவர்கள், வகுப்புகளில் கலந்துகொள்வதற்காக இந்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள், சில சமயங்களில், பயிற்சி மாலை தாமதமாக நடைபெறும் – உதாரணமாக டேபிள் டென்னிஸ்.

இந்த இடத்தை ரீமேக் செய்து தனது தாயார் ராதா சுவாமிக்கு அர்பணித்துள்ளதாகவும், இந்த பள்ளிகள் இசை மற்றும் நடனம் மற்றும் விளையாட்டுகளை வழங்குகிறது. இவற்றில் எங்கள் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும், மாணவர்கள் உயர்ந்த இலக்கை அடைய வேண்டும், அதற்கான இடம் இதுதான். என்று இந்த பள்ளிகளை நிர்வகித்து வரும் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் கே சுவாமி கூறுகிறார்.

திங்கட்கிழமை நிகழ்வானது மூன்று பள்ளிகளின் முதல்வர்கள் , மற்றும் ஆசிரியர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுக்கான இடத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுவாமி குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சங்கப் பொருளாளர் எஸ்.ஸ்ரீதரன், செயலர் வத்சலா நாராயணசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்து பேசினர்.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago