மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அபார்ட்மெண்ட்ஸில் சமூக நவராத்திரி கொண்டாட்டங்கள்.

மந்தைவெளியில் உள்ள ராகமாலிகா அடுக்குமாடி குடியிருப்பு அக்டோபர் 2 முதல் 11 வரை ஒன்பது நாட்களும் சமூக நவராத்திரி கொண்டாட்டங்களை நடத்தி வந்தது.

ரஞ்சினி மண்டபத்தில் ஒரு பிரமாண்ட கொலு உருவாக்கப்பட்டு காட்சிப்படுதப்பட்டது.

தினமும், பாரம்பரிய பூஜை, லலிதா, விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.

இங்கு தினமும் குடும்பங்களுக்கு சுண்டலுடன் தாம்பூலம் வழங்கப்பட்டது.

குடியிருப்பாளர்கள் மாறி மாறி பிரசாதம் மற்றும் தாம்பூலம் வழங்கினர். குழந்தைகள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் போது குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பாரம்பரிய உடைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

செய்தி: கல்யாணி முரளிதரன் (குடியிருப்பாளர்)

Verified by ExactMetrics