மயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. லஸ் பேராலயத்தில் பூசைகள் முடிந்தவுடன் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களும் இளைஞர்களும் சேர்ந்து அங்கு இருக்கும் பூங்காவில் கொடியேற்றினர்.

இசபெல் மருத்துவமனையில் படிக்கும் மாணவிகள் சேர்ந்து பெரிய தேசியக்கொடி ரங்கோலி கோலம் போட்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர். சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவின் தலைவர்களும் மற்றும் அங்கு பணிபுரிவர்களும் சேர்ந்து குடியரசு தினவிழாவை கொடியேற்றி கொண்டாடினர்.

சிவசாமி கலாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சேர்ந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். ஆனால் பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கொரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்கள் பங்கேற்கவில்லை. சி.ஐ.டி காலணியில் உள்ள பூங்காவில் அங்கு வசிக்கும் மக்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

admin

Recent Posts

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago

பாரதிய வித்யா பவனின் மார்கழி இசை விழா நவம்பர் 20ல் தொடங்குகிறது.

பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…

3 weeks ago

ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகம் நவம்பர் 23ல்.

மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…

3 weeks ago