மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. லஸ் பேராலயத்தில் பூசைகள் முடிந்தவுடன் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களும் இளைஞர்களும் சேர்ந்து அங்கு இருக்கும் பூங்காவில் கொடியேற்றினர்.
இசபெல் மருத்துவமனையில் படிக்கும் மாணவிகள் சேர்ந்து பெரிய தேசியக்கொடி ரங்கோலி கோலம் போட்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர். சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவின் தலைவர்களும் மற்றும் அங்கு பணிபுரிவர்களும் சேர்ந்து குடியரசு தினவிழாவை கொடியேற்றி கொண்டாடினர்.
சிவசாமி கலாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சேர்ந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். ஆனால் பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கொரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்கள் பங்கேற்கவில்லை. சி.ஐ.டி காலணியில் உள்ள பூங்காவில் அங்கு வசிக்கும் மக்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…