மயிலாப்பூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டங்கள்

மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. லஸ் பேராலயத்தில் பூசைகள் முடிந்தவுடன் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களும் இளைஞர்களும் சேர்ந்து அங்கு இருக்கும் பூங்காவில் கொடியேற்றினர்.

இசபெல் மருத்துவமனையில் படிக்கும் மாணவிகள் சேர்ந்து பெரிய தேசியக்கொடி ரங்கோலி கோலம் போட்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர். சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவின் தலைவர்களும் மற்றும் அங்கு பணிபுரிவர்களும் சேர்ந்து குடியரசு தினவிழாவை கொடியேற்றி கொண்டாடினர்.

சிவசாமி கலாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சேர்ந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். ஆனால் பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கொரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்கள் பங்கேற்கவில்லை. சி.ஐ.டி காலணியில் உள்ள பூங்காவில் அங்கு வசிக்கும் மக்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.

Verified by ExactMetrics