மெரினா கடற்கரை சாலையில் அரசின் சார்பாக குடியரசு தினவிழா நடைபெற்றது. இதில் கொடியேற்றம், அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெற்றது. இது தவிர மயிலாப்பூரில் பல இடங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. லஸ் பேராலயத்தில் பூசைகள் முடிந்தவுடன் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆர்.ஏ. புரத்தில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் வசிக்கும் மக்களும் இளைஞர்களும் சேர்ந்து அங்கு இருக்கும் பூங்காவில் கொடியேற்றினர்.
இசபெல் மருத்துவமனையில் படிக்கும் மாணவிகள் சேர்ந்து பெரிய தேசியக்கொடி ரங்கோலி கோலம் போட்டு குடியரசு தின விழாவை கொண்டாடினர். சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவின் தலைவர்களும் மற்றும் அங்கு பணிபுரிவர்களும் சேர்ந்து குடியரசு தினவிழாவை கொடியேற்றி கொண்டாடினர்.
சிவசாமி கலாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் சேர்ந்து குடியரசு தின விழாவை கொண்டாடினர். ஆனால் பள்ளிகளில் நடைபெற்ற குடியரசு தின விழாக்களில் கொரோனா காரணமாக அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்கள் பங்கேற்கவில்லை. சி.ஐ.டி காலணியில் உள்ள பூங்காவில் அங்கு வசிக்கும் மக்கள் கொடியேற்றி குடியரசு தின விழாவை கொண்டாடினர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…