இந்த கோவிட்-19 காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட தொழில் ரெஸ்டாரெண்ட் தொழில். சிலர் தங்களது கடையை மூடிவிட்டனர். சிலர் பெரிய பகுதியிலிருந்து சிறிய பகுதிக்கு இடம் மாறி விட்டனர். சிலர் கேட்டரிங் தொழில் செய்கின்றனர். இது போன்று நிறைய மாற்றங்கள் உணவகம் தொழிலில் ஏற்பட்டுள்ளது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மிகவும் பிரபலமான உணவகம் சங்கீதா ரெஸ்டாரண்ட். இவர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் உணவகத்தை திறந்த போது கடையை ஒட்டி ஒரு சிறிய அளவிலான காய்கறி மற்றும் பழக் கடையை நடத்தி வந்தனர். தற்போது இந்த காய்கறி கடை விரிவுபடுத்தப்பட்டு காய்கறி, பழங்கள், இட்லி தோசை மாவுகள், ஸ்னாக்ஸ் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதேபோன்று இவர்களுடைய ஊழியர்கள் கடையின் வாயிலருகே வந்து சாலையில் காரில் வருபவர்களுக்கு அவர்களது வாகனத்திற்கே உணவு மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவற்றை கொண்டு வந்து வழங்குகின்றனர். இந்த கொரோனா காலத்தில் சங்கீதா உணவகம் இதுபோன்ற சேவையை வழங்குகின்றனர்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…