2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, கடலோர காலனியான பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த தீபாவும் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த மனிதவள பயிற்சி பெற்ற பட்டதாரி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் தனது குடும்ப தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்த சவாலான வேலையை செய்து சம்பாதிக்க விரும்பினார்.
இவருடைய பணி என்னவென்றால் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் – இவர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உழைத்தார், கடந்த ஆண்டின் முடிவில் இவரது ஒப்பந்தம் முடிவடைந்தது.
ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வைரஸின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியது, தீபா மீண்டும் ஒப்பந்த கோவிட் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது தொடர்ச்சியான களப்பணி மற்றும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக, இந்த வாரம் ஜி.சி.சி யின் உள்ளூர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்கள் தீபாவுக்கு ஒரு சிறப்பு டி-ஷர்ட் வழங்கினர். இந்த நிகழ்வில் பகுதி பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.
மக்கள் தடுப்பூசி போட மறுத்துவரும் சீனிவாசபுரத்தில் கடந்த வாரம், தீபாவும் அவரது குழுவும் சுமார் 50 பேரை தடுப்பூசி போட வைத்தனர். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,
வார்டு 173-ல் (ஆர்.ஏ.புரம் – கே.வி.பி கார்டன்ஸ் – எம்.ஆர்.சி நகர் – சீனிவாசபுரம்) கணக்கெடுக்கும் இவரும் இவரது குழுவும் வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, சீக்கிரம் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தீபா கூறுகிறார்.
மே மாதத்தின் 39 டிகிரி வெப்பத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை செய்யும் இந்த வேலை எளிதான வேலை அல்ல.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…