Categories: சமூகம்

சொந்த முயற்சியால் குப்பம் பகுதியில் கோவிட் பராமரிப்பு வேலையை செய்து வரும் தீபாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, கடலோர காலனியான பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த தீபாவும் கையெழுத்திட்டிருந்தார்.

இந்த மனிதவள பயிற்சி பெற்ற பட்டதாரி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் தனது குடும்ப தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்த சவாலான வேலையை செய்து சம்பாதிக்க விரும்பினார்.

இவருடைய பணி என்னவென்றால் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் – இவர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உழைத்தார், கடந்த ஆண்டின் முடிவில் இவரது ஒப்பந்தம் முடிவடைந்தது.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வைரஸின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியது, தீபா மீண்டும் ஒப்பந்த கோவிட் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவரது தொடர்ச்சியான களப்பணி மற்றும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக, இந்த வாரம் ஜி.சி.சி யின் உள்ளூர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்கள் தீபாவுக்கு ஒரு சிறப்பு டி-ஷர்ட் வழங்கினர். இந்த நிகழ்வில் பகுதி பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

மக்கள் தடுப்பூசி போட மறுத்துவரும் சீனிவாசபுரத்தில் கடந்த வாரம், தீபாவும் அவரது குழுவும் சுமார் 50 பேரை தடுப்பூசி போட வைத்தனர். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

வார்டு 173-ல் (ஆர்.ஏ.புரம் – கே.வி.பி கார்டன்ஸ் – எம்.ஆர்.சி நகர் – சீனிவாசபுரம்) கணக்கெடுக்கும் இவரும் இவரது குழுவும் வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, சீக்கிரம் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தீபா கூறுகிறார்.

மே மாதத்தின் 39 டிகிரி வெப்பத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை செய்யும் இந்த வேலை எளிதான வேலை அல்ல.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

20 hours ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

2 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

3 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

5 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

6 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

6 days ago