Categories: சமூகம்

சொந்த முயற்சியால் குப்பம் பகுதியில் கோவிட் பராமரிப்பு வேலையை செய்து வரும் தீபாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்கள்.

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா தொற்றுநோய் ஆங்காங்கே பரவத்தொடங்கிய போது சென்னை கார்ப்பரேஷன் உள்ளூர் பகுதி மக்களுக்கு சேவையாற்ற டஜன் கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களை பணியமர்த்தியபோது, கடலோர காலனியான பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஸ்ரீனிவாசபுரத்தைச் சேர்ந்த தீபாவும் கையெழுத்திட்டிருந்தார்.

இந்த மனிதவள பயிற்சி பெற்ற பட்டதாரி தனது இரண்டு இளம் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் தனது குடும்ப தேவையை பூர்த்திசெய்வதற்கும் இந்த சவாலான வேலையை செய்து சம்பாதிக்க விரும்பினார்.

இவருடைய பணி என்னவென்றால் வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிவது, அவர்களை தனிமைப்படுத்துவது, பரிசோதனைகள் மற்றும் சிகிச்சையைப் பெற ஏற்பாடு செய்வது போன்ற வேலைகள் – இவர் 2020 ஆம் ஆண்டு முழுவதும் உழைத்தார், கடந்த ஆண்டின் முடிவில் இவரது ஒப்பந்தம் முடிவடைந்தது.

ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வைரஸின் இரண்டாவது அலை மக்களைத் தாக்கியது, தீபா மீண்டும் ஒப்பந்த கோவிட் பராமரிப்பு பணியாளராக வேலை செய்து வந்தார்.

இவரது தொடர்ச்சியான களப்பணி மற்றும் சில குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக, இந்த வாரம் ஜி.சி.சி யின் உள்ளூர் அதிகாரிகள் பாராட்டினர். அவர்கள் தீபாவுக்கு ஒரு சிறப்பு டி-ஷர்ட் வழங்கினர். இந்த நிகழ்வில் பகுதி பொறியாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் கலந்து கொண்டனர்.

மக்கள் தடுப்பூசி போட மறுத்துவரும் சீனிவாசபுரத்தில் கடந்த வாரம், தீபாவும் அவரது குழுவும் சுமார் 50 பேரை தடுப்பூசி போட வைத்தனர். இது பாராட்டத்தக்க முயற்சியாகும்,

வார்டு 173-ல் (ஆர்.ஏ.புரம் – கே.வி.பி கார்டன்ஸ் – எம்.ஆர்.சி நகர் – சீனிவாசபுரம்) கணக்கெடுக்கும் இவரும் இவரது குழுவும் வைரஸ் அறிகுறிகளைக் கொண்டவர்களைக் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி, சீக்கிரம் சிகிச்சை அளிப்பதில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக தீபா கூறுகிறார்.

மே மாதத்தின் 39 டிகிரி வெப்பத்தில் காலை 8 மணி முதல் நண்பகல் வரை செய்யும் இந்த வேலை எளிதான வேலை அல்ல.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

4 days ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

4 days ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

3 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago