மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி : நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது.

இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சில்ட்ரன்ஸ் கார்டன் மற்றும் இராணி மெய்யம்மை பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்களுக்கு எழுபத்தி ஏழாயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர்.

நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவி அளிக்க விரும்பினால் பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த உதவி தொகை பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்தும் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago