மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி : நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது.

இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சில்ட்ரன்ஸ் கார்டன் மற்றும் இராணி மெய்யம்மை பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்களுக்கு எழுபத்தி ஏழாயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர்.

நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவி அளிக்க விரும்பினால் பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த உதவி தொகை பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்தும் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

5 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

6 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago