மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுவது மற்றும் படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் வழியாக சேகரித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பள்ளியிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் தற்போது ஏன் முன்னெடுக்கப்படுகிறது என்று பள்ளியின் முன்னாள் மாணவர்களை கேட்கும் போது, அப்போது பெற்றோரிடையேயும் மாணவர்களிடையும் இது பற்றி புகாரளிக்க போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதே நேரத்தில் அவர்களிடையே பய உணர்வு இருந்ததாலும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதால், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் ஒளிவு மறைவில்லாமல் பேசப்படுவதால் இந்த புகார் இப்போது முன்னெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…