அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய மூன்று ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுவது மற்றும் படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் வழியாக சேகரித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பள்ளியிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் தற்போது ஏன் முன்னெடுக்கப்படுகிறது என்று பள்ளியின் முன்னாள் மாணவர்களை கேட்கும் போது, அப்போது பெற்றோரிடையேயும் மாணவர்களிடையும் இது பற்றி புகாரளிக்க போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதே நேரத்தில் அவர்களிடையே பய உணர்வு இருந்ததாலும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதால், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் ஒளிவு மறைவில்லாமல் பேசப்படுவதால் இந்த புகார் இப்போது முன்னெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

6 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago