மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுவது மற்றும் படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் வழியாக சேகரித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பள்ளியிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் தற்போது ஏன் முன்னெடுக்கப்படுகிறது என்று பள்ளியின் முன்னாள் மாணவர்களை கேட்கும் போது, அப்போது பெற்றோரிடையேயும் மாணவர்களிடையும் இது பற்றி புகாரளிக்க போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதே நேரத்தில் அவர்களிடையே பய உணர்வு இருந்ததாலும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதால், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் ஒளிவு மறைவில்லாமல் பேசப்படுவதால் இந்த புகார் இப்போது முன்னெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…