செய்திகள்

அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பாலியல் புகாரில் சிக்கிய மூன்று ஆசிரியர்கள் பணியிடைநீக்கம்.

மயிலாப்பூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள பி.எஸ் மேல்நிலைப்பள்ளியின் மூன்று சீனியர் ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இவர்கள் மீது கடந்த பத்து வருடங்களுக்கு முன் இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார்கள் அளித்துள்ளனர். இவர்கள் மாணவிகளை பாலியல் ரீதியாக தொடுவது மற்றும் படங்களை பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இது போன்ற பாலியல் பிரச்சனைகளை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் ஆன்லைன் வழியாக சேகரித்து பள்ளிக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர். தற்போது பள்ளியிலும் இதுபோன்ற புகார்களை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளியின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் தற்போது ஏன் முன்னெடுக்கப்படுகிறது என்று பள்ளியின் முன்னாள் மாணவர்களை கேட்கும் போது, அப்போது பெற்றோரிடையேயும் மாணவர்களிடையும் இது பற்றி புகாரளிக்க போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதே நேரத்தில் அவர்களிடையே பய உணர்வு இருந்ததாலும் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அனைத்துக்கும் தீர்வு கிடைப்பதால், அதே நேரத்தில் அனைத்து விஷயங்களும் ஒளிவு மறைவில்லாமல் பேசப்படுவதால் இந்த புகார் இப்போது முன்னெடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

2 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

2 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

3 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

3 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

4 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

4 days ago