சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.
சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…