சாந்தோம் நெடுஞ்சாலையில் மந்தமாக நடைபெற்று வரும் மழைநீரை வடிகால் சீரமைப்பு பணிகள்

சாந்தோம் நெடுஞ்சாலையில் நீண்ட நாட்களாக சாலையோரம் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் நடைபாதைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சுறுசுறுப்பாக நாடடைபெறவில்லை.

சாந்தோம் குயில் தோட்டம் பகுதியிலிருந்து பட்டினப்பாக்கம் வரை உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டது. இந்த பகுதியில்தான் மழை பொழிந்தால் சாலை முழுவதும் மழை நீர் தேங்கி நிற்கும். இது தவிர பட்டினப்பாக்கத்திலிருந்து அடையார் பூங்கா (தொல்காப்பிய பூங்கா) வரை நடைபாதையை ஒட்டி மழைநீர் வடிகால் வேலைகளை செய்து வருகின்றனர். இங்கு குறைந்த அளவிலான பணியாளர்களே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக சாலையில் பிஸியான நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

விரைவில் மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சியிடமும் மற்றும் குடிநீர் வாரியத்திடமும் இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

4 weeks ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

1 month ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

1 month ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

1 month ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 months ago