இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை நிறைய பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திறந்த வெளியிலும் சில பேராலயங்களில் தேவாலயத்தின் உள்ளேயும் நடைபெற்றது. நேற்றைய தினம் ‘மாண்டி வியாழன்’ கொண்டாடப்பட்டது. நாளைய மறுநாள் அனைத்து பேராலயங்களிலும் ஈஸ்டர் சண்டே தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த மாதம் பேராலய பாதிரியார்கள் கிறிஸ்தவ மக்களை தொண்டு செய்யுமாறு அறிவுறுத்துவர். அந்த வகையில் நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா பேராலயத்தில், மக்கள் கடந்த நாற்பது நாட்களாக தொண்டு செய்வதற்காக வீட்டில் தினமும் குறைந்தளவு சேமிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை பேராலயத்தில் கொண்டு வந்து தொண்டு செய்வதற்காக பாதிரியர்களிடம் வழங்கினர். இந்த உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…