இந்த வாரம் பேராலயங்களில் புனித வாரம் கொண்டாடப்படுகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வியாழக்கிழமை நிறைய பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திறந்த வெளியிலும் சில பேராலயங்களில் தேவாலயத்தின் உள்ளேயும் நடைபெற்றது. நேற்றைய தினம் ‘மாண்டி வியாழன்’ கொண்டாடப்பட்டது. நாளைய மறுநாள் அனைத்து பேராலயங்களிலும் ஈஸ்டர் சண்டே தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த மாதம் பேராலய பாதிரியார்கள் கிறிஸ்தவ மக்களை தொண்டு செய்யுமாறு அறிவுறுத்துவர். அந்த வகையில் நேற்று ஆர்.ஏ.புரத்தில் உள்ள மாதா பேராலயத்தில், மக்கள் கடந்த நாற்பது நாட்களாக தொண்டு செய்வதற்காக வீட்டில் தினமும் குறைந்தளவு சேமிக்கப்பட்ட அரிசி, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை பேராலயத்தில் கொண்டு வந்து தொண்டு செய்வதற்காக பாதிரியர்களிடம் வழங்கினர். இந்த உணவு பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…