ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோற்சவம்: பிப்ரவரி 12ல் லக்ன பத்திரிக்கை நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின் ஒவ்வொரு நாட்களின் சிறப்புகளை அறிவிக்கும் புனித லக்னப் பத்திரிக்கை நிகழ்வு பிப்ரவரி 12, 2022 சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

சிறப்பு நிகழ்வுகள் வாகன ஊர்வலங்கள் ஒவ்வொன்றின் விவரங்களையும் கோவிலின் பரம்பரை அர்ச்சகர் வாசிப்பார். இந்த நிகழ்வு பங்குனி பிரம்மோற்சவத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது.

மாலை 5.30 மணிக்கு மகா அபிஷேகத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, பரம்பரை அர்ச்சகர் லக்னப் பத்திரிக்கையை வாசிப்பார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிப்ரவரி 12ம் தேதி சனிக்கிழமை மாலையில் கபாலீஸ்வரர் மற்றும் கற்பகாம்பாள் ஆகியோர் கோயிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்கள்.

பங்குனி திருவிழா நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் வழக்கமான நேரங்களை போல் வரலாம் என்று தெரிகிறது. தற்போது, கொரோனா தொற்றுநோய் நேர விதிகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் கோயில்களுக்குச் செல்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago